districts

img

தனது சொந்த செலவில் பொதுமக்களுக்கு முகக்கவசம், கிருமிநாசினி வழங்கும் விவசாயி

மயிலாடுதுறை, ஜன.10- மயிலாடுதுறை மாவட் டம் தரங்கம்பாடி வட்டம் கொத்தங்குடி ஊராட்சி நீலவெளி பகுதியில் உள்ள ரேசன் கடைகளுக்கு வரும் பொதுமக்களுக்கு தனது  சொந்த செலவில் முகக்கவ சம் மற்றும் கிருமிநாசினி ஆகியவற்றை தொடர்ந்து வழங்கி வரும் விவசாயி ஒரு வருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. நீலவெளி அருகிலுள்ள ஐவேலி கீழ்க்கரையை சேர்ந்தவர் விவசாயி பன்னீர்  செல்வம். இவர் கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு  காலங்களில் ஒவ்வொரு வீடு களுக்கும் சென்று முகக்கவ சம், கபசுர குடிநீர் வழங்கிய தோடு டிராக்டர், டாடா ஏசி  வாகனங்களில் பெரிய டேங்குகளில் மஞ்சள், வேப் பிலை மற்றும் மூலிகைகள்  அடங்கிய கிருமிநாசினி தண் ணீரை நிரப்பி வேலம்புதுக் குடி, நீலவெளி, ஐவேலி,  கீழ்க்கரை, நெய்தவாசல் உள்ளிட்ட பகுதிகள் முழுவ தும் தெளித்து வந்தார். தனது சொந்த செலவி லேயே மக்களுக்கான சேவை  களை செய்த பன்னீர்செல் வம், தற்போது தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்  பினை ரேசன் கடைகள் மூலம் வழங்கி வருவதால், ரேசன்  கடைகளில் கூட்டம் அதிக மாக கூடுகிறது. இதையறிந்த அவர் திங்களன்று ஒவ்  வொரு ரேசன் கடைகளுக் கும் சென்று, அங்கே கூடி நின்ற பொதுமக்களுக்கு முகக்கவசம், கிருமிநாசினி வழங்கி வழங்கினார். 500க்கும்  மேற்பட்ட மக்களுக்கு மாஸ்க் உள்ளிட்டவற்றை வழங்கி வருவதோடு திங்க ளன்று நீலவெளி அங்காடி முன்பு காத்திருந்த மக்க ளுக்கு சிற்றுண்டியையும் அளித்துள்ளார். தொடர்ந்து பொதுமக்க ளுக்கு பல்வேறு சேவை களை செய்து வருகிற விவ சாயி பன்னீர்செல்வத்தின் பணியை அனைத்து தரப்பின ரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், கொத்தங் குடி கிராம நிர்வாக அலுவலர், அவருக்கு சால்வை, மாலை அணிவித்து கவுரவித்தார்.