திருச்சி அரிஸ்டோ ரயில்வே மேம்பாலத்தில் கடந்த ஜூலை 30 அன்று, இரவு ரோந்துப் பணியில் தலைமைக் காவலர் ஸ்ரீதர் ஈடுபட்டிருந்தார். அப்போது நிகழ்ந்த சாலை விபத்தில் அவர் உயிரிழந்தார். இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஞாயிறன்று திருச்சி விமான நிலையத்தில் அவரது குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதிக்கான காசோலையை வழங்கி ஆறுதல் கூறினார். திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகர காவல்துறை ஆணையர் என்.காமினி ஆகியோர் உடனிருந்தனர்.