districts

img

உயர்கல்வி நிறுவனங்களில் துப்புரவு பொறியியல் துறையை உருவாக்க வேண்டும்

தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தல் தஞ்சாவூர்/மன்னார்குடி, ஜூலை 20-  விஷவாயு மரணங்களைத் தடுத்திட வேண்டும். உயர்கல்வி நிறுவனங்களில் துப்புரவு பொறியியல் துறையை உரு வாக்கிட வேண்டும் என வலியுறுத்தி தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில், மாநிலம் முழுவதும் வெள்ளிக் கிழமை கோரிக்கை முழக்கப் போ ராட்டம் நடைபெற்றது.  தூய்மைப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ள தொழிலாளர்களின் மறுவாழ்வை  உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக் கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலை வர் கே.பன்னீர்செல்வம் தலைமை வகித் தார். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியின் மாநிலக் குழு உறுப்பினர் பி. செந்தில்குமார், மாநிலச் செயலாளர் ஆர்.கலைச்செல்வி, மாவட்டச் செயலா ளர் என்.சிவகுரு, மாவட்டப் பொருளாளர் பி.சத்யநாதன் மற்றும் மாவட்ட நிர்வாகி கள், மாவட்டச் செயலாளர்கள் என்.வி. கண்ணன் (தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்),  இ.வசந்தி (மாதர் சங்கம்), ஆம்பல் துரை. ஏசுராஜா (வாலிபர் சங்கம்), எம்.சேகர் (வழக்கறிஞர்கள் சங்கம்), கே.சந்துரு (இந்திய மாணவர் சங்கம்), மாவட்டத் தலைவர் அர்ஜூன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மன்னார்குடி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நக ராட்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் தலித் அமைப்புகள் இணைந்து ஆர்ப்பாட் டம் நடத்தின. ததீஒமு மாவட்டச் செயலா ளர் கே.தமிழ்மணி தலைமை வகித்தார். துணைத் தலைவர் பி.கந்தசாமி, துணைச்  செயலாளர் கே.கோபிராஜன், பொருளா ளர் இரா.ஏசுதாஸ், மாவட்டக் குழு உறுப்பி னர் கே.பிச்சைக்கண்ணு உள்ளிட்டோர் பேசினர். மாநிலச் செயலாளர் ஆர்.கலைச் செல்வி சிறப்புரையாற்றினார்.