புதுக்கோட்டை, ஜூன் 10-
ஆணாதிக்கக் கண்ணோட்டத்துடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரை அவதூறு செய்யும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சங்கத்தின் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், ‘‘புதுக் கோட்டை மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலக வளாகத்தில் இருந்த விநா யகர் சிலை அகற்றப்பட்டுள்ளதாக சிலர் சமூக ஊடகங்களில் சில தினங்களுக்கு முன்பு தகவல் பரவியது.
இதனையடுத்து சில மத அடிப்ப டைவாதிகள் மாவட்ட ஆட்சியர் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் சிலையை அகற்றிவிட்டதாக அவதூறு பரப்பினர். இதனையடுத்து சிலை அகற் றப்படவில்லை என்றும், இந்த தவறான தகவலை யாரும் நம்ப வேண்டாம் என்றும் மாவட்ட ஆட்சியர் ஐ.சி.மெர்சி ரம்யா உரிய விளக்கம் அளித்துவிட்டார்.
ஆனாலும், இதில் அரசியல் ஆதாயம் தேடும் நோக்கிலும், மதக் கலவரத்தை தூண்டும் வகையிலும் சிலர், மாவட்ட ஆட்சியர் மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வருகின்றனர். நடக்காத ஒரு சம்பவத்தை நடந்ததாக தொடர்ந்து வதந்தியைப் பரப்பி வரும் சமூக விரோதிகள் மீது உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யாவை மாவட்டச் செயலாளர் பி.சுசிலா, தலை வர் எஸ்.பாண்டிச்செல்வி, துணைத் தலைவர் டி.சலோமி ஆகியோர் சந்தித்து தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.