districts

img

கிராமப்புற மக்களிடம் அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்

திருவாரூர், ஜன.1 - கிராமப்புற மக்களிடம் அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை  எடுக்க வேண்டுமென வலியுறுத்தப் பட்டுள்ளது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தின் திருவாரூர் மாவட்ட மாநாடு  வலங்கைமான் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.  மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் யூ. எஸ்.பொன்முடி தலைமை வகித்தார்.  மாவட்டத் துணைத் தலைவர்கள் நீலன். அசோகன், பி.ரமேஷ், பி.தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநி லத் துணைத் தலைவர் வ.சேதுராமன் துவக்கி வைத்து உரையாற்றினார். சமூக மாற்றத்திற்கான அறிவியல் என்ற தலைப்பில் மாநில துணைத் தலை வர் முனைவர் வி.சுகுமாரன் கருத்துரை யாற்றினார். முன்னதாக மாவட்டச் செயலாளர் பி.சங்கரலிங்கம் வரவேற்றார். வலங் கைமான் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் பறையாட்டம், கொரடாச்சேரி ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மேல திருமதிகுன்னம் மாணவர்களின் நம்ம  ஊரு ஆட்டம் கிராமிய கலை நிகழ்ச்சி கள் நடைபெற்றன. கலை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட  மாணவர்களுக்கு வலங்கைமான் வட்டார கல்வி அலுவலர் எஸ்.சுகந்தி பாராட்டி பரிசுகள் வழங்கினார்.  மாநாட்டில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி  மற்றும் ஊராட்சி துறை அனைத்து ஓய்வூ தியர்கள் சங்க மாநிலத் தணிக்கையா ளர் எஸ்.புஷ்பநாதன், தமிழ்நாடு அறி வியல் இயக்கத்தின் ஒன்றியத் தலைவர்  தெய்வபாஸ்கரன், பொருளாளர் பா.பிர பாகரன், தமுஎகச வட்டாரத் தலைவர்  பாலசுந்தரம், செயலாளர் அந்தோணி பாஸ்கர் ஆகியோர் வாழ்த்துரை ஆற்றி னர்.  புதிய மாவட்ட பொறுப்பாளர்களை அறிமுகம் செய்து தமிழ்நாடு அறிவி யல் இயக்கத்தின் மாநிலச் செயலா ளர் எம்.எஸ்.ஸ்டீபன்நாதன் நிறை வுரையாற்றினார்.  அமைப்பிற்கு தலைவராக பி.சங்கர லிங்கம், செயலாளராக ஜி.காந்தி ராஜன், பொருளாளராக க.அன்பழ கன் ஆகியோர் ஆகியோர் தேர்வு  செய்யப்பட்டனர். 27 நிர்வாக குழு உறுப் பினர்கள், 54 செயற்குழு உறுப்பி னர்கள், 75 பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஊராட்சிப் பகுதிகளில் கிராம நிர்வாகத்தின் மூலம் சேகரிக்கப்படும் குப்பைகளை வகை பிரித்து முறை யாக மறுசுழற்சி செய்ய அரசு ஆவன செய்ய வேண்டும். சாலை விரிவாக் கங்களின் போது  அகற்றப்படும் மரங்க ளுக்கு நிகராக புதிய மரக்கன்றுகளை நடுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். கிராமங்கள் தோறும் சென்று  மக்களிடம் அறிவியல் மனப்பான்மை விழிப்புணர்வை தமிழ்நாடு அரசு ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.