districts

திருவாரூர் பட்டுக்கோட்டை காரைக்குடி அகல ரயில் பாதையை மின்மயமாக்க ரயில்வே வாரியம் ஒப்புதல்

தஞ்சாவூர், ஜூலை 26-  

     தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்குட்பட்ட திருவாரூர்-பட்டுக்கோட்டை-காரைக்குடி அகல ரயில் பாதையை ரூ.143.07 கோடி செலவில் மின்மயமாக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.  

   திருவாரூர் - பட்டுக்கோட்டை - காரைக் குடி மீட்டர் கேஜ் ரயில் பாதை, கடந்த 2019  ஆம் ஆண்டு அகல ரயில் பாதையாக மாற்றப் பட்டது.

    தற்சமயம் இந்த ரயில் தடத்தில் தாம்பரம்  - செங்கோட்டை அதிவிரைவு ரயில் வாரம்  மும்முறையும், செகந்திராபாத் - இராமநாத புரம் வாராந்திர சிறப்பு விரைவு ரயில், எர்ணா குளம் - வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு  விரைவு ரயில் வாரம் ஒரு முறையும், திரு வாரூர் - காரைக்குடி பயணிகள் ரயில் திங்கட் கிழமை முதல் சனிக்கிழமை வரையும் இயக்கப் பட்டு வருகிறது.

   இந்த ரயில் பாதை மின்மயமாக்கப்படாத  காரணத்தினால், சென்னையில் இருந்து வரு கிற விரைவு ரயில்களில், திருவாரூரில் மின்சார ரயில் இன்ஜின்களுக்கு பதிலாக டீசல் ரயில் இன்ஜின் மாற்றப்பட்டு இயக்கப் பட்டு வருகிறது. இதனால் பயண நேரம் அதிக மாகிறது. டீசல் உபயோகத்தால் சுற்றுச்சூழ லும் மாசுபடுகிறது.  

    எனவே 149 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட திருவாரூர் - பட்டுக்கோட்டை - காரைக் குடி ரயில் பாதையை விரைந்து மின்மய மாக்க வேண்டும் என வலியுறுத்தி, பட்டுக் கோட்டை வட்ட ரயில் பயணிகள் நலச் சங்க மும், மற்ற ரயில் பயணிகள் நலச் சங்கங்க ளும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தன.  

   இந்நிலையில், தற்போது ரயில்வே வாரியம் இந்த ரயில் பாதையை ரூ.143 கோடியே 7 லட்சம் செலவில் மின்மயமாக்க ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ரயில் தடத்தை மின்மயமாக்க  ஒப்புதல் அளித்த ரயில்வே வாரியத் தலைவர், மின்துறை இயக்குநர், தென்னக ரயில்வே பொது மேலாளர், திருச்சி கோட்ட ரயில்வே மேலா ளர் ஆகியோருக்கு பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நலச் சங்கத்தினர் நன்றி தெரி வித்துள்ளனர்.