திருவாரூர், ஆக.14 -
திருவாரூர் மாவட்டம் குடவாசலில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சிறப்பு பேரவை நடைபெற்றது. கூட்டத்திற்கு வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் எம்.எஸ். ஜெய்கிஷ் தலைமை வகித்தார். சிபிஎம் செயற்குழு உறுப்பினரும் முன்னாள் மாவட்ட செயலாளருமான பி.கந்தசாமி, மாவட்டச் செயலாளர் ஏ.கே.வேலவன் ஆகி யோர் உரையாற்றினர். மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்கார வேலன் நிறைவுரையாற்றினார். மாவட்ட பொருளாளர் எம்.டி.கேசவராஜ், மாவட்ட துணைத் தலைவர் எஸ்.எம்.சலா வுதீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.