districts

திருச்சி முக்கிய செய்திகள்

பயிர் காப்பீடு செய்ய நவ.22 வரை அவகாசம்

கரூர், நவ.18 - சம்பா நெற்பயிர் காப்பீட்டுக்கான கடைசி தேதியை 22.11.2023 வரை நீட்டித்து ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கி யுள்ளது.   நவ.18,19 (சனி, ஞாயிறு) தேதிகளில் பொது சேவை  மையங்கள் செயல்படுவதால், கரூர் மாவட்டத்தில் இதுவரை சம்பா நெற்பயிருக்கு காப்பீடு செய்யாத விவசாயிகள் உரிய ஆவணங்கள் மற்றும் காப்பீட்டு கட்டணமாக ஏக்கருக்கு ரூ.560.20 செலுத்தி காப்பீடு செய்து கொள்ள வேண்டும். நிர்ணயம் செய்யப்பட்ட காலக்கெடுவுக்குள் ஏற்க னவே பதிவு செய்த விவசாயிகள் மீண்டும் பதிவு செய்ய  வேண்டாம். இத்திட்டம் குறித்த கூடுதல் விபரங்களுக்கு பயிர் காப்பீடு இணையதள முகவரி (www.pmfby.gov.in)  அல்லது அருகிலுள்ள வட்டார வேளாண்மை உதவி  இயக்குநர், வேளாண்மை அலுவலர், உதவி வேளாண்மை அலுவலர், தேசியமயமாக்கப்பட்ட வங்கி கள், திட்டத்தை செயல்படுத்தும் காப்பீட்டு நிறுவனத் தையோ அணுகி பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளார்.

நவ.24-இல் விவசாயிகள்  குறைதீர் கூட்டம்

புதுக்கோட்டை, நவ.18 - புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 24.11.2023 (வெள்ளிக்கிழமை) காலை 10.30  மணியளவில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா  தலைமையில் நடைபெற உள்ளது. எனவே, விவசாயி கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் தொடர்பு டைய கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.   

மணமேல்குடியில் மாட்டுவண்டி பந்தயம்

அறந்தாங்கி, நவ.18 - மருது பாண்டியர்கள் 222 வது குருபூஜை விழாவை  முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மணமேல்குடியில் மாட்டுவண்டி எல்லை பந்தயம்  நடைபெற்றது.  இந்த போட்டி பெரிய மாடு, நடுமாடு, சின்னமாடு என  மூன்று பிரிவுகளாக நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை,  மதுரை, தேனி, சிவகங்கை, தஞ்சை ஆகிய மாவட்டங் களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இந்த பந்தயத்தில் முதல்  மூன்று இடங்களை பிடித்த மாட்டு வண்டி உரிமையாளர் களுக்கு ரூ.4 லட்சம் ரொக்கப் பரிசு, எல்இடி டிவி, பிரிட்ஜ்  மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன. மணமேல்குடி காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ரயில் மோதி வடமாநில  இளைஞர் உயிரிழப்பு

புதுக்கோட்டை, நவ.18 - புதுக்கோட்டை ரயில்வே நிலையம் அருகே வட மாநிலத்தைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க இளைஞர் வெள்ளிக்கிழமை ரயில் மோதி உயிரிழந்துள்ளார்.  இதுகுறித்து அவ்வழியாக சென்றவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் காரைக்குடி ரயில்வே போலீசா ரும், திருக்கோகர்ணம் காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அவரது  உடலை கூராய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்  கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரி ழந்த வட மாநில இளைஞர் குறித்து காவல்துறையினரும் ரயில்வே போலீசாரும் விசாரித்து வருகின்றனர்.

மாணவர் தற்கொலை வழக்கில் சக மாணவர் கைது

புதுக்கோட்டை, நவ.18 - கீரனூரை அடுத்த கொப்பம்பட்டியைச் சேர்ந்த பள்ளி மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், சக மாணவரை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டத்தைச் சேர்ந்த கொப்பம்பட்டியைச் சேர்ந்தவர் பள்ளி மாணவர் விஷ்ணுகுமார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். பட்டியலின வகுப்பைச் சேர்ந்த இவரை, பிற சமூகத்தைச் சேர்ந்த சக மாணவர்கள் சாதியைச் சொல்லி தகராறு செய்ததாகவும், மிரட்டியதாகவும் புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து, வழக்கின் பிரிவுகள் மாற்றப்பட்டு உடையாளிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். உண்மைக் குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை வலியுறுத்தி இருந்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில், மாணவர் விஷ்ணுகுமாரை சாதியைச் சொல்லி திட்டி மிரட்டியதாக, பிற சமூகத்தைச் சேர்ந்த சக மாணவர் ஒருவரை போலீசார் புதன்கிழமை இரவு கைது செய்து இளஞ்சிறார் நீதிக் குழுமத்தில் ஆஜர்படுத்தி, கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர்.

தமிழக அளவில் முதலிடம் பிடித்த கல்லுக்குளம் ஆரம்ப சுகாதார நிலையம்

தஞ்சாவூர், நவ.18 -  தமிழக அளவிலான நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், கல்லுக் குளம் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முதலிடம் பெற்றுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 312 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், தஞ்சாவூர் மாநக ரில் கல்லுக்குளம், கரந்தை, மகர்நோன்பு சாவடி, சீனிவாசபுரம் ஆகிய 4 நகர்ப்புற  ஆரம்ப சுகாதார நிலையங்கள் இயங்கு கின்றன. தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத் துறை, ஆரம்ப சுகாதார நிலைய செயல்பாடுகள் அடிப் படையில் (ஏப்ரல் மாதம் முதல்), மாதந்தோ றும் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வரு கிறது. புற நோயாளிகள் வருகை, உள்நோயாளி  அனுமதி, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலை யங்களின் பிரசவ எண்ணிக்கை, ஆய்வக பரிசோதனைகள், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மார்பக புற்றுநோய், கருப்பை வாய் பரிசோதனை, கர்ப்பிணி தாய்மார்க ளின் பதிவு, கருத்தரித்தவுடன் 12 வாரத் துக்குள் கர்ப்பிணி தாய்மார்களின் பதிவு,  இரும்பு சத்து மாத்திரை வழங்குதல், குழந்தை பிறப்பின்போது 2.5 கிலோ வுக்கும் அதிகமான எடை இருத்தல், குழந்தை களுக்கு 100 சதவீதம் தடுப்பூசி செலுத்துதல் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டு, 312 நகர்ப்புற ஆரம்ப சுகா தார நிலையங்களுக்கான தரவரிசை பட்டி யல் புதன்கிழமை வெளியிடப்பட்டது. இதில், அக்டோபர் மாதத்துக்கான தர வரிசை பட்டியலில் கல்லுக்குளம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் தமிழ்நாடு அள வில் முதலிடத்தையும், கரந்தை நகர்ப்புற  ஆரம்ப சுகாதார நிலையம் இரண்டாமிடத் தையும், மகர்நோன்புசாவடி நகர்ப்புற  ஆரம்ப சுகாதார நிலையம் நான்காமிடத்தை யும், சீனிவாசபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார  நிலையம் ஏழாமிடத்தையும் பெற்றுள்ளன. இது தொடர்பாக மருத்துவக் குழுவின ருக்கு மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாநகராட்சி ஆணை யர் ஆர்.மகேஸ்வரி, மாநகர் நல அலுவலர்  வீ.சி. சுபாஷ் காந்தி ஆகியோர் பாராட்டினர்.