districts

தகாத முறையில் பேசியவர்களைக் கண்டித்து பேராசிரியர்கள் தர்ணா

பாபநாசம், மே 28-

     தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே ரெகுநாத புரத்தில் அரசு பாலிடெக்னிக் உள்ளது. இங்கு தேர்வு விடைத் தாள்களை திருத்துவதற்காக   100-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் வந்திருந்தனர். இதில் சில பெண் பேராசிரி யர்கள் கல்லூரி முதல்வர் குடியிருப்பில் தங்கியிருந்தனர். அவர்களிடம் கல்லூரியில் பணியாற்றும் சிலர் தகாத வார்த்தைகளில் பேசியதாகக்கூறி விடைத்தாள் திருத்து வதற்காக வந்திருந்த பேராசிரியர்கள் தர்ணாவில் ஈடுபட்ட னர்.  தகவலறிந்து வந்த அய்யம் பேட்டை காவல்துறையி னர் பேராசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.