கும்பகோணம், டிச.27 - எட்டு அம்சக் கோரிக்கைகளை வலியு றுத்தி திருபுவனம் பட்டு கூட்டுறவு சங்க வாசல் முன்பு, சிஐடியு, தமாகா, ஏஐடியுசி நெசவாளர் சங்கங்களின் கூட்டமைப்பு குழு சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் நடை பெற்றது. போராட்டத்திற்கு தமாகா மோகன், சிஐடியு பக்கிரிசாமி, ஏஐடியுசி ஹரிதாஸ் ஆகி யோர் தலைமை வகித்தனர். தமிழ் மாநில காங்கிரஸ் தொழிற்சங்க கௌரவத் தலைவர் எம்.ராஜாங்கம், சிஐடியு மாவட்டத் தலை வர் ம.கண்ணன், ஏஐடியுசி மாநிலச் செயலா ளர் தில்லைவனம், சிஐடியு நெசவாளர் சம்மேளன மாநில பொதுச் செயலாளர் என்.பி.நாகேந்திரன், தமாகா நாராயணசாமி, ஏஐடியுசி மணி மூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் பட்டு கூட்டுறவு சங்கத்தின் அங்கத்தினருக்கு 2022-23 தணிக்கை முடிந்து, போனஸ் டிவிடெண்ட் வழங்க வேண்டும். சங்கத்தின் வரவு-செலவுகளை கீழ்தளத்திலிருந்து பணியாற்றி டவும், அங்கத்தினர்கள் இலகுவாக வந்து செல்ல அலுவலகத்தை கீழ்த்தளத்திற்கு மாற்ற வேண்டும். திருபுவனம் பட்டு கூட்டுறவு சங்கத்தில் தேங்கியுள்ள பட்டு சேலைகளுக்கு உடனடி யாக 30 சதவீத தள்ளுபடி மானியம் வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசு ஜரிகை ஆலை யில் உற்பத்தி செய்யப்படும் அசல் வெள்ளி ஜரிகைக்கு 20 சதவீதம் தள்ளுபடி மானியம் வழங்க வேண்டும். சங்கத்திற்கு முழு நேர மேலாண்மை இயக்குநரை நியமிக்க வேண்டும். தலைமை விற்பனை நிலையத்தில் வியா பார நடவடிக்கை எடுக்க வேண்டும். கிளை விற் பனை நிலையத்தில் கவனம் செலுத்தி நேரடி கிளை நிர்வாகம் அமைக்க வேண்டும். சங்க அங்கத்தினருக்கு பாவுப்பட்டு ஜரி கையை கால தாமதமின்றி நல்ல முறையில் விற்பனைக்கு ஏற்ற ரகம் உருவாக்கி வழங்க வேண்டும். சங்க அங்கத்தினர்களுக்கு கொ ரோனா காலத்தில் வழங்கிய ரூ. 4 ஆயி ரத்தை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.