மயிலாடுதுறை, ஏப்.21- மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் ஸ்ரீ அமிர்த கடேஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் ஞாயி றன்று நடைபெற்றது. அருள்மிகு அபிராமி அம்மன் உடனாகிய அமிர்த கடேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திரு விழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் நிக ழாண்டு சித்திரை திருவிழா கடந்த ஏப்.6 அன்று கொடி யேற்றத்துடன் தொடங்கி யது. சித்திரை திருவிழாவின் 8 ஆம் நாள் நிகழ்ச்சியாக தேரோட்டம் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தர் பிரம்மச்சாரி சுவாமிகள் முன்னிலையில் காலை 8 மணியளவில் தேரோட்டம் தொடங்கியது. கோவில் பணி யாளர்கள் மற்றும் குருக்கள் தேரை வடம் பிடித்து துவக்கி வைத்தனர். அமிர்தகடேஸ்வரர் கோயிலை சுற்றி யுள்ள நான்கு வீதிகளின் வழியாக தேர் வலம் வந்து பகல் 11 மணியளவில் தேர் நிலைக்கு வந்தடைந்தது. நிகழ்ச்சியில் கோயில் கண்காணிப்பாளர் மணி, கோயில் உள்துறை செயலாளர் விருத கிரி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் துளசி ரேகா ரமேஷ் உட்பட கோயில் பணியாளர்கள், கிராம மக்கள் மற்றும் வெளியூரைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.