அறந்தாங்கி, டிச.3 - கட்டுமாவடி மீன் சந்தை யில் 56 கிலோ எடை கொண்ட இரண்டு திருக்கை மீன்கள் ரூ.16 ஆயிரத்திற்கு ஏலம் போயின. புதுக்கோட்டை மாவட் டம் கட்டுமாவடியில் பெரிய மீன் சந்தை உள்ளது. இங்கு தமிழகத்தின் பல மாவட்டங்க ளிலிருந்து மீன்கள் விற்ப னைக்கு வருகின்றன. அதே போன்று இங்கிருந்து மீன்கள் வெளி மாவட்டங் களுக்கு ஏற்றுமதியா கின்றன. இந்நிலையில், ஞாயி றன்று தூத்துக்குடி யிலிருந்து இரண்டு ராட்சத திருக்கை மீன்கள் கொண்டு வரப்பட்டன. 56 கிலோ எடை கொண்ட திருக்கை மீன் கிலோ 150 வீதம் தலா ரூ. 8,400-க்கு விற்பனையானது. இரண்டு திருக்கை மீன் களும் ரூ.16,800-க்கு விற்பனையாயின. இந்த மீன்களை அறந் தாங்கியைச் சேர்ந்த மீன் வியாபாரி ஒருவர் ஏலம் எடுத் தார். இந்த மீன் ஒரு கிலோ 250 முதல் 300 ரூபாய் வரை சந்தையில் விற்பனையா கிறது.