திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூர் வட்டம் பச்சைமலை அருகில் உள்ள நெசக்குளம் பகுதியில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த தகவலின்படி, மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் ஆகியோர் வெள்ளியன்று பச்சைமலைப் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது, அங்கிருந்த 250 லிட்டர் கள்ளச்சாராயத்தை அழித்தனர்.