கரூர், ஜூன் 26 - கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றியம், திம்மம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கணக்கப் பிள்ளையூர், திம்மம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு பல மாதங்களாக நூறு நாள் வேலை வழங்கவில்லை. இதனால் பொது மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே பொதுமக்களுக்கு உடனடியாக நூறு நாள் வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க குளித் தலை ஒன்றியக் குழு சார்பில் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு கட்சியின் கணக்கப் பிள்ளையூர் கிளைச் செயலாளர் சிறும்பாயி தலைமை வகித்தார். குளித்தலை ஒன்றியச் செயலாளர் இரா.முத்துச்செல்வன், விதொச மாவட்டச் செயலாளர் பி.ராஜூ ஆகியோர் கண்ட உரையாற்றினர். தகவலறிந்து வந்த குளித்தலை காவல் ஆய்வாளர், குளித்தலை பிடிஓ ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதில் 15 நாட்களுக்குள் நூறு நாள் வேலை வழங்கப்ப டும் என்று உறுதியளித்தனர். இதனைத் தொ டர்ந்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப் பட்டது.