சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிப்பதைத் தடைசெய்யக் கோரி மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி, சின்னூர்பேட்டை,குட்டியாண்டியூர், வெள்ளக்கோயில், பெருமாள் பேட்டை, புதுப்பேட்டை, தாழம் பேட்டை, சின்னங்குடி, சின்னமேடு, வானகிரி, நாயக்கர்குப்பம்,மேலமூவர்கரை, சாவடிகுப்பம்,கீழமூவர்கரை, தொடுவாய், சின்னகொட்டாய்மேடு, கூழையார்,பழையார்,கொடியம்பாளையம் உள்ளிட்ட 19 மீனவ கிராமங்களைச் சேர்ந்தவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களது வேலை நிறுத்தம் நான்கு நாளாக வியாழனன்றும் தொடர்ந்தது.