கரூர், ஆக.7 -
பள்ளி மாணவர்களிடம் இலவச பேருந்து பயண அட்டை இருக்கிறது; ஆனால் பேருந்து வசதி இல்லை. எனவே க.பரமத்தி வழியாக நகரப் பேருந்தை இயக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டம் க.பரமத்தி ஒன்றி யக்குழு கூட்டம், நடைபெற்றது. கூட் டத்திற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் ஆர்.முகமதுஅனீபா தலைமை வகித்தார். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கா.கந்தசாமி, சி. முருகேசன் ஆகியோர் பேசினர். ஒன்றிய செயலாளர் எம்.கே.மணியன் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம், பவித்ரம் ஊராட்சி, குரும்பபட்டி காலனி யில் தெரு விளக்குகள் பல வாரங்க ளாக எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் மிகுந்த சிர மத்திற்கு உள்ளாகின்றனர். ஊராட்சி நிர்வாகம் உடனடியாக தெரு விளக்கு களை சீர்செய்திட வேண்டும். பவித்திரம் மேட்டுக்கடையில் இருந்து பாலமலை செல்லும் வழியில், பாரதி நகர் காலனி வளைவில் வேகத்தடை அமைத்து, இரு மின் கம்பங்களிலும் மின் விளக்கு கள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம், நெடுங்கூர், ஆரியூர் ஊராட்சிப் பகுதி களில் இருந்து பள்ளி க.பரமத்தி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு வரும் மாணவ- மாணவிகளுக்கு, அரசு இலவச பேருந்து பயண அட்டை இருக்கிறது. ஆனால் அரசு நகரப் பேருந்து வசதி இல்லை. இதனால் மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
எனவே காலை, மாலை இரு வேளைகளிலும், கரூரிலிருந்து கூனம்பட்டி வரை செல்லும் அரசு நகரப் பேருந்தை தினமும் நெடுங்கூர், ஆரியூர், க.பரமத்தி வழியாக இயக்கு வதற்கு மாவட்ட நிர்வாகம் உடனடி யாக நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன.