மயிலாடுதுறை, ஜூலை 23 - மயிலாடுதுறை மாவட்டம் பொறையா ரில் உள்ள புகழ்பெற்ற செயின்ட் ஜார்ஜ் புனித சந்தியாகப்பர் ஆலயத்தின் 24 ஆம் ஆண்டு திருவிழாவையொட்டி தேர்பவனி மற்றும் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழா, பொறையார் இராஜம்மாள் வீதியில் உள்ள தேர் பவனி ஆலய நிர்வாகி மைக்கேல்ராஜ் தலைமையில் நடை பெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பழங்கள், இனிப்பு, புடவைகள் என பல வகையான பொருட்களை சீர்வரிசைகளாக எடுத்து பேரணியாக வந்தனர். பின்னர் குழந்தை ஏசு, தேவமாதா, சந்தி யாகப்பர் உள்ளிட்ட சுரூபங்கள் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரதங்களில், பக்தர்கள் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வல மாக வந்து ஆலயத்தை அடைந்தனர். உலக நன்மைக்காக சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நாகை, காரைக்கால், திருவாரூர், கடலூர், சென்னை, மதுரை, இராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், வெளி மாநிலங்க ளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.