கிருஷ்ணகிரி, அஞ்செட்டி வட்டத்தில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் நடைபெற்று வருகிறது. சரவணா பவன் உணவக உரிமையாளர் கணேசன்,ஸ்ரீ விக்னேஷ் நகைக்கடை உரிமையாளர் ராமச்சந்திரன், பொரிக்கடை நடத்திவரும் தர்மன், மற்றும் வட்டக் குழு உறுப்பினர்கள் கிருஷ்ணன், ரவிச்சந்திரன் ஆகியோர் ஓராண்டு சந்தா வழங்கினர்.புதிய சந்தாக்களை மாநிலக் குழு உறுப்பினர் பி.டில்லிபாபு, மாவட்டச் செயலாளர் ஜி.கே.நஞ்சுண்ன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். செயற்குழு உறுப்பினர்கள் சேகர்,இருதயராஜ், பிரகாஷ்,அஞ்செட்டி வட்ட செயலாளர் தேவராஜன்,வட்டக்குழு உறுப்பினர் குமாரவடிவேல் தீக்கதிர் சந்தாசேர்ப்பு இயக்கத்தில் ஈடுபட்டனர்.