திருநெல்வேலி,டிச.28- நெல்லை அருகே கன மழை வெள்ளத்தால் மஞ்சள் பயிர்கள் நாசமாகியுள்ளன. இவற்றிற்கு உரிய நிவார ணம் வழங்க வேண் டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நெல்லையில் உள்ள அருகன்குளம், சேந்திமங்க ளம், நாரணம்மாள்புரம், திரு வண்ணாநாதபுரம் பொட்டல் ஆற்றங்கரை பகுதிகளில் உள்ள வயல் களில் ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையொட்டி மஞ்சள் பயிரிடுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு கிணறு மற்றும் குளத்தின் நீரை பயன்படுத்தி பயிரிட்டி ருந்தனர். ஒரு மாதத்தில் அறு வடைசெய்ய வேண்டிய நிலையில், கடந்த வாரத்தில் பெய்த தொடர் கனமழை யால் மஞ்சள் பயிர்கள் மிகவும் சேதமாகியுள்ளன. இதேபோல வாழை பயிர்களும் சேதமாகியுள்ளன. இதுகுறித்து விவசாயி கள் கூறுகையில், ஆண்டு தோறும் பொங்கல் பண்டி கையில் மஞ்சள் குலை விற்பனை களைகட்டும். இதனை கருத்தில் கொண்டு சுமார் 3 ஏக்கருக் கும் மேற்பட்ட நிலத்தில் சுற் றுவட்டார பகுதியில் மஞ்சள் பயிரிடப்பட்டிருந்தன. தொடர் மழையால் அந்தப் பயிர்கள் அனைத்தும் சேத மாகியுள்ளன. சில இடங்களில் அதிக தண்ணீர் வயலில் தேங்கிய தால் அழுகிவிட்டது. இதனால் பெரும் பாதிப் புக்கு ஆளாகியுள்ளோம். ஆகவே, அரசு முறையாக கணக்கெடுத்து இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.