districts

img

வேலை, சம்பள உயர்வு வழங்க வேண்டும் சிஐடியு சுமைப்பணி தொழிலாளர்கள் கஞ்சித் தொட்டி திறந்து போராட்டம்

திருச்சிராப்பள்ளி, அக்.28 - வேலை, சம்பள உயர்வு  வழங்கக் கோரி சிஐடியு  சுமைப்பணி தொழிலா ளர்கள் கஞ்சித்தொட்டி திறந்து போராட்டத்தில் ஈடு பட்டனர். திருச்சி காந்தி மார்க்கெட்  சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள வேஸ்ட் பேப்பர் குடோனில் 50-க்கும் மேற் பட்ட சுமைப்பணி தொழிலா ளர்கள் வேலை செய்து  வருகின்றனர். இவர்களுக்கு  2 ஆண்டுக்கு ஒருமுறை பேச்சுவார்த்தை நடத்தி,  சம்பள உயர்வு வழங்கப் படும். இந்த ஆண்டிற்கான சம்பள உயர்வு பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால்  சுமைப்பணி தொழிலா ளர்களுக்கு கடந்த 15 நாட் களாக வேலை கொடுக்க வில்லை.  இதனை கண்டித்தும்  சுமைப்பணி தொழிலாளர் களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும். சம்பள  உயர்விற்கான பேச்சுவார்த் தையை உடனே துவங்கி சம்பள உயர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு வேஸ்ட் பேப்பர்  சுமைப்பணி தொழிலா ளர்கள் சனிக்கிழமை இபி சாலையில் குடும்பத்துடன் கஞ்சித் தொட்டி திறக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு சுமைப் பணி சங்கத் தலைவர் பாண்டி துரை தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா, சுமைப் பணி சங்க மாவட்டச் செய லாளர் சிவக்குமார், மாவட்ட துணைத்தலைவர் சின்ன துரை, லாரி புக்கிங் லோடு மேன் சங்க மூர்த்தி, டிரான்ஸ் போர்ட் சங்க இளங்கோ, சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் ரமேஷ் ஆகி யோர் பேசினர். போராட்டத் தில் சுமைப்பணி தொழி லாளர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.