பெரம்பலூர், செப்.25 - தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டின் வனப்பரப்பினை 33 சதவீதமாக உயர்த்து வதற்கு “பசுமை தமிழ்நாடு” என்ற இயக் கத்தை 2022 செப்.24 ஆம் தேதி தொடங்கி வைத்தார். இதனால் இந்நாள் பசுமை தமிழ்நாடு தினமாக அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில், பெரம்பலூர் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் வனத்துறை யின் சார்பில் நடத்தப்பட்ட 1000 மரக் கன்றுகள் நடும் பணி யினை மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ், பெரம் பலூர் சட்டமன்ற உறுப்பி னர் ம.பிரபாகரன் ஆகி யோர் செவ்வாயன்று தொடங்கி வைத்தனர். தொடர்ந்து மாவட்டத் தில் பெரம்பலூர், எசனை, அம்மாபாளையம், ஒதியம், குரும்பலூர், ஆலம்பாடி ஆகிய பகுதி களில் உள்ள அரசுப் பள்ளிகளிலும், பெரம்ப லூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி, தொண்ட பாடி மாரியம்மன் கோவில் அருகில் உள்ளிட்ட இடங்களிலும் மாவட்ட வனத்துறையின் சார்பில் புங்கன், வேம்பு, மகோகனி, பாதாம், நீர்மருது உட்பட பல்வேறு வகை யான ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படஉள்ளன.