உதகை, பிப்.4- உதகையில் கோடை சீசனுக்கான ரோஜா பூங்கா வில் 30,000 செடிகளை கவாத்து செய்யும் பணியினை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். நீலகிரி மாவட்டம், உதகை அரசு தாவரவியல் பூங்கா வில் கடந்த 1995 ஆம் ஆண்டு ரோஜா பூங்கா தொடங் கப்பட்டது. அங்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட 4,201 வீரிய ரகங்களை சேர்ந்த 32,000 ரோஜா செடிகள் நடவு செய்து பராமரிக் கப்பட்டு வருகின்றன. கடந்த 2006 ஆம் ஆண்டு உலக ரோஜா சம்மேளனம், உதகை ரோஜா பூங்காவிற்கு உலக ளவில் சிறந்த ரோஜா பூங்கா என்ற விருதை வழங்கி சிறப்பித்தது. தென்கிழக்கு ஆசிய நாடுகளிலேயே மிக அதிக ரகங்களை கொண்ட பூங்காவாக விளங்குகிறது. ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் நீலகிரியில் கோடை சீசன் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு அதற் கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதி யாக ரோஜா செடிகளை கவாத்து செய்யும் பணிகள் திங்க ளன்று தொடங்கியது. இதனை மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து பணியாளர்கள் ரோஜா செடிகளை கவாத்து செய்யும் பணியில் ஈடுபட்டு வரு கின்றனர். கவாத்து செய்த செடிகளில் இருந்த ரோஜா மலர்களை பணியாளர்கள் சேகரித்தனர். இதுகுறித்து தோட்டக்கலை துறை அதிகாரிகள் கூறுகையில், வரு டந்தோறும் ரோஜா பூங்காவிற்கு அதிகபட்சமாக 9 லட்சம் பேர் வரை வருகின்றனர். ரோஜா பூங்காவில் தற்போது கூடுதலாக 100 ரோஜா ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதேபோல் மொத்தம் 32000 ஆயிரம் செடி களில் 2000 செடிகள் தவிர 30 ஆயிரம் செடிகளில் கவாத் துப் பணிகள் நடைபெற உள்ளது. இதை தொடர்ந்து செடி களுக்கு இயற்கை உரம் இடப்பட்டு, மருந்து தெளித்து, களை எடுத்து பராமரிக்கப்படும். கவாத்து செய்வதன் மூலம் செடிகள் நன்றாக வளர்ந்து பூக்கள் அதிகமாக பூக்கும். கோடை சீசனுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் வகை யில் ஏப்ரல் மாதம் ரோஜா மலர்கள் பூத்துக்குலுங்கும். அவர்களது கண்களுக்கு புதிய பூக்கள் விருந்தாக அமைய உள்ளது. இருபதாவது ரோஜா கண்காட்சிக் காக 2.5 லட்சம் மலர்கள் நடவு செய்யப்பட்டு பார்வையா ளர்கள் மகிழும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது, என்றார். முன்னதாக, ஆட்சியர் துவக்கிவைத்த நிகழ்வில், தோட்டக்கலை இணை இயக்குனர் சிப்லா மேரி, உதவி இயக்குனர் பெரோஸ்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.