தஞ்சாவூர், ஜூன்.20 - தஞ்சாவூரில் புதன்கிழ மை மாலை சூறைக் காற்று டன் பெய்த மழையால் ரயில் நிலையத்தில் இரண்டாவது நடைமேடை தகரக் கூரை பெயர்ந்து விழுந்தது. தஞ்சாவூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன் கிழமை மாலை ஏறத்தாழ ஒரு மணிநேரம் சூறைக்காற்று, பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது, தஞ்சாவூர் ரயில் நிலை யத்தில் இரண்டாவது நடை மேடையில் மேற்கூரையில் வேயப்பட்டிருந்த தகரக் கூரை ஏறத்தாழ 100 அடி அளவில் பெயர்ந்து தண்டவாளத்தில் விழுந்தது. இந்த நடைமேடையில் ஏற்கெனவே சீரமைப்பு பணி நடைபெற்று வருவதால், ரயில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இத னால், அங்கு ஆள்கள் யாரும் இல்லாததால், யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால், இந்தத் தகரக் கூரை முதலாவது நடை மேடைக்கான தண்டவாளம் வரை பரவி விழுந்து கிடந்தது. இதனால், முதலாவது நடைமேடையில் ரயில் போக்குவரத்து பாதிக்கப் பட்டது. இதன் காரணமாக திருச்சி வழித்தடத்திலிருந்து வந்த ரயில்கள் நான்காவது நடைமேடைக்கும், கும்பகோ ணம் வழித்தட ரயில்கள் மூன்றாவது நடைமேடைக் கும் திருப்பி விடப்பட்டன. இதனால், பயணிகள் சிர மத்துக்கு ஆளாகினர். இதனிடையே, ரயில்வே பணியாளர்கள் சுமார் 2.30 மணிநேரம் முயற்சி செய்து தண்டவாளத்தில் விழுந்து கிடந்த தகரக் கூரையை அகற்றியதையடுத்து, ரயில் போக்குவரத்து சீரானது. மேலும், அறுந்து விழுந்த மின் கம்பிகளை சீரமைக்கும் பணி யில் ஈடுபட்டனர். தகவலறிந்த தஞ்சாவூர் தொகுதி மக்களவை உறுப்பி னர் ச.முரசொலி நிகழ்விடத்து க்குச் சென்று பார்வையிட்டு, ரயில்வே அலுவலர்களிடம் நிலைமையைக் கேட்ட றிந்தார்.