கரூர், அக்.18 - ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச அஞ்சல் ஒன்றியம் சார்பில் முறையே மாநில, தேசிய, உலக அளவில் மாணவ, மாணவிய ருக்கான கடிதம் எழுதும் போட்டி நடை பெறுகிறது. இந்த ஆண்டு “எதிர்கால சந்ததியி னருக்கு, அவர்கள் எவ்வகையான உலக வாழ்வைப் பெற்றிருப்பர்” என்ற மையக் கருத்தில் நடைபெற்ற கடிதம் எழுதும் போட்டி யில், கரூர் பரணி வித்யாலயா பள்ளி 8 ஆம் வகுப்பு மாணவி ஆதிரா மணிகண்டன் முறையே தமிழக அளவிலும் இந்திய அளவி லும் முதலிடம் பிடித்துள்ளார். மேலும் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் நடைபெறும் உலக அளவிலான இறுதிப் போட்டியில் இந்தியா சார்பாக பங்குபெற ஆதிரா மணிகண்டன் எழுதிய கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மாநில அளவில் முதல் பரிசு ரூ.25 ஆயிரத் திற்கான காசோலை மற்றும் வெற்றிச்சான்றி தழ் வழங்கும் விழா பள்ளியில் நடை பெற்றது. விழாவிற்கு பள்ளியின் தாளாளர் எஸ்.மோகனரங்கன் தலைமை வகித்தார். செயலர் பத்மாவதி மோகனரங்கன் மற்றும் அறங்காவலர் சுபாஷினி அசோக்சங்கர் முன்னிலை வகித்தனர். கரூர் கோட்ட அஞ்சலக கண்காணிப் பாளர் அ.இரா.தமிழினி மற்றும் அஞ்சல் துறை அலுவலர்கள் சர்வதேச அளவில் தமிழ கத்திற்கு பெருமை சேர்த்த மாணவி ஆதிரா மணிகண்டன் மற்றும் சாதனைக்கு உறுது ணையாக இருந்த முதன்மை முதல்வர் முனைவர் சி.ராமசுப்ரமணியன், முதல்வர் எஸ்.சுதாதேவி, துணை முதல்வர் ஆர்.பிரியா, ஆசிரியர்களைப் பாராட்டி பரிசளித்த னர். தேசிய அளவிலான பரிசளிப்பு விழா விரைவில் புதுதில்லியில் நடைபெறும் என அறிவித்தனர். இவ்விழாவில் ஆதிராவின் பெற்றோர் மற்றும் பரணி பார்க் கல்விக் குழும மாண வர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மாணவியை பாராட்டினர்.