திருச்சிராப்பள்ளி, பிப்.5 - பாதாளச் சாக்கடை பணி யால் சேதமடைந்த சாலைக்கு பால் ஊற்றி, வாலிபர் சங்கத்தினர் நூத னப் போராட்டத்தில் ஈடு பட்டனர். திருச்சி மாநகராட்சி 41 ஆவது வார்டுக்குட்பட்ட திரு வெறும்பூர்-நவல்பட்டு சாலை மற்றும் தெரு சாலை களில் பல ஆண்டுகளாக ‘பாதாளச் சாக்கடை பணி’ என்ற பெயரில் மெத்தனமாய் பணியாற்றும் எல்&டி ஒப்பந்த நிர்வாகத்தையும், மாநகராட்சி நிர்வாகத் தையும் கண்டித்தும், உட னடியாக சாலையை செப்ப னிடக் கோரியும் திங்க ளன்று நூதனப் போராட்டம் நடைபெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் திங்களன்று பாரத் திரு மண மண்டபம் அருகே சாலையில் பால் ஊற்றும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு பகுதிச் செயலாளர் சந்தோஷ், மாவட்ட துணைச் செயலா ளர் நிவேதா ஆகியோர் தலைமை வகித்தனர். போராட்டத்தை விளக்கி வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் லெனின், மாவட்டச் செயலாளர் சேது பதி, பொருளாளர் நவநீத கிருஷ்ணன், யுவராஜ் ஆகி யோர் பேசினர். பாதாளச் சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட சாலையின் நடுவே பாலை ஊற்றி கண்டன முழக்கம் எழுப்பினர். பின்னர் நடந்த பேச்சுவார்த்தையில், மாநக ராட்சி மற்றும் தனியார் நிறு வன அதிகாரிகள் 20 நாட் களுக்குள் பாதாளச் சாக்கடை பணியை முடித்து தருவதாக உறுதியளித்தனர்.