தஞ்சாவூர், பிப்.22- வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையில் 3 ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங் களை உடனே நிரப்ப வேண் டும். அனைத்து தாலுகாவி லும் சான்றிதழ் வழங்கும் பணிக்கென புதிய துணை வட்டாட்சியர் பணியிடங் களை ஏற்படுத்த வேண்டும். நாடாளுமன்ற தேர்தல் பணி களை தொய்வின்றி மேற்கொள்ள முழுமையான நிதி ஒதுக்கீட்டினை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி பிப்ர வரி 22 வியாழனன்று தமிழ் நாடு வருவாய்த்துறை அலு வலர்கள் சங்கத்தினர் பணி களை புறக்கணித்து காத்தி ருப்புப் போராட்டத்தில் ஈடு பட்டனர். தஞ்சை மாவட்டத்தில் உள்ள 9 வட்டாட்சியர் அலு வலகம், தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், ஆட்சியர் அலுவலகம் என 12 இடங்களில் இந்த காத் திருப்பு போராட்டம் நடை பெற்றது. தஞ்சை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த காத்திருப்பு போராட்டத் திற்கு வட்ட தலைவர் கோவிந்தராஜ் தலைமை தாங் கினார். வட்ட செயலாளர் சரவணன், மாவட்ட செயற் குழு உறுபபினர்கள் மதி யழகன், நல்லதம்பி ஆகி யோர் பங்கேற்றனர். மாவட்டம் முழுவதும் நடைபெற்ற போராடங்களில் 250-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட 400-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். பேராவூரணி வட்டக் கிளையில் வட்ட கிளைத் தலைவர் ஜெயதுரை தலைமை வகித்தார். வட்டாட்சியர் தெய்வானை, மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் அசரப், சுப்ரமணி யன், வட்ட செயலாளர் ரெத் தினவேல் ஆகியோர் பேசி னர். திருவாரூர் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட செயலாளர் மகேஷ் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட வரு வாய் அலுவலர் சங்க நிர்வா கிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூர் அரியலூர் ஆட்சியர் அலு வலகம் மற்றும் ஜெயங் கொண்டம், ஆண்டிமடம், செந்துறை ஆகிய வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் அலு வலக வளாகத்தில் நடை பெற்ற போராட்டத்துக்கு பாக்கியம் விக்டோரியா தலைமை வகித்தார்.