பேராவூரணி, ஆக.27-
அரசியல் தலையீட்டின் காரணமாக இடைக்கால பணிநீக்கம் செய்யப்பட்ட கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் மனோஜ் முனியன் மீதான இடைக்கால பணி நீக்கத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு சங் கத்தின் வட்டக் கிளைத் தலைவர் ஜெயதுரை தலைமை வகித்தார். மண்டல துணை வட்டாட்சி யர் சுப்பிரமணியன், சங்கத் தின் வட்டப் பொருளாளர் கிள்ளிவளவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.