அரியலூர் மாவட்டம் சூரியமணல் கிராமத்தை சேர்ந்தவர்கள் வினோத் மற்றும் ராசு. இவர்கள் இருவரும், கடந்த ஜூன் ஒன்றாம் தேதி சைக்கிளில் ஜெயங்கொண்டத்திலிருந்து புறப்பட்டு லடாக் சென்று, அங்கு நாட்டின் பாதுகாப்பிற்காக பணியாற்றும் ராணுவ வீரர்களை சந்தித்துவிட்டு, புதன்கிழமை ஜெயங்கொண்டம் வந்தடைந்தனர். சைக்கிளில் சுமார் 8,400 கி.மீட்டர் பயணம் செய்து திரும்பிய இளைஞர்களை பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வரவேற்றனர்.