districts

img

வீட்டு வேலை செய்யும் பெண் தொழிலாளர்கள் பிரச்சனைக்கு தீர்வு வேண்டும்

திண்டுக்கல்லில்  ஆர்.சச்சிதானந்தம் எம்.பி பேச்சு திண்டுக்கல், ஜன.30- வீட்டு வேலை செய்யும் பெண்  தொழிலாளர்களின் பிரச்சனை மற்றும் முறைசாரா தொழிலா ளர்களின் பிரச்சனை குறித்து தீர்வு  காண வேண்டும். இது தொடர்பாக வருகின்ற நாடாளுமன்ற கூட்டத் தில் குரல் எழுப்ப உள்ளேன் என்று திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் பேசினார். திண்டுக்கல்லில் புனித சூசை யப்பர் கோவிலில் உழைக்கும் மக்  கள் கூட்டமைப்பு சார்பாக கருத்து  பரப்புரை பிரச்சாரம் துவங்கியது. இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் மக்க ளவை உறுப்பினர் ஆர்.சச்சிதா னந்தம் பங்கேற்று பிரச்சாரத்தை துவக்கி வைத்து சிறப்புரையாற்றி னார். குறைந்த பட்ச கூலிச்சட் டத்தை மத்திய மாநில அரசுகள் அமலாக்க வேண்டும். சாம்சங் தொழிலாளர்களுக்கு தொழிற்சங்க பதிவு கிடைத்துள்ளது. ஒரு பன்  னாட்டு நிறுவனத்திற்கு எதிராக தொழிற்சங்கம் அமைக்க வேண்  டும் என்றால் எவ்வளவு போரா ட்டத்தை நாம் நடத்த வேண்டி யுள்ளது. ஒரு நிறுவனத்தில் திர ளாக உள்ள தொழிலாளர்களை திரட்டுவதில் சிரமம் இருக்கிறது.  இந்நிலையில் முறைசாராத் தொழி லாளர்களை அணிதிரட்டுவதில் பெரும் சிரமங்கள் உள்ளன. வீட்டு வேலை செய்யும் பெண் தொழிலாளர்கள் பிரச்சனைகள் ஒரு புறம் இருக்கிறது. இந்த தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளுக்காக தொடர்ந்து போராடி வருகிறார்கள். மனுக் கொடுத்து வருகிறார்கள். ஆனால் தீர்வு காணப்படவில்லை. இது தொடர்பாக வருகிற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் முறைசாராத் தொழிலாளர்கள் மற்றும் வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்கள் பிரச்சனைகள் குறித்து பேசுவேன். இவ்வாறு அவர் பேசினார். உழைக்கும் மக்கள் கூட்ட மைப்பின் மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் அருள், முனைவர் பிலிப் சுதாகர், தேசிய செயற்குழு உறுப்பினர் எல்.ஏ.சாமி, சிஐடியு  மாவட்டச் செயலாளர் சி.பி.ஜெய சீலன், ஏஐடியுசி மாவட்டச் செய லாளர் பாலன், டிஆர்எல்எம்சிடியூ மாவட்டச் செயலாளர் சிவமுரு கேசன், சிபிஎம் மாமன்ற உறுப்பி னர் கே.எஸ்.கணேசன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.