districts

img

கட்டி முடிக்கப்பட்டு பல ஆண்டுகளாகியும் திறக்கப்படாத பின்னவாசல் அங்கன்வாடி கட்டிடம்

தஞ்சாவூர், நவ.2 -  பின்னவாசல் ஊராட்சியில், கட்டி முடிக் கப்பட்டு பல ஆண்டுகளாகியும் திறக்கப் படாத, அங்கன்வாடி கட்டிடத்தை திறக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.  தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஒன்றியம் பின்னவாசல் புதுக்குடியிருப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளைக் கூட்டம் அருண் தலைமையில் நடை பெற்றது. இதில், பேராவூரணி ஒன்றியச் செயலாளர் வே.ரெங்கசாமி பங்கேற்றார். இக்கூட்டத்தில், “முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு  நிதியில்,  பின்னவாசல் புது குடியிருப்பு பகுதியில், பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடம்,  இதுவரை திறக்கப்படாமல் உள்ளது. இத னால் இப்பகுதியில் உள்ள 20க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ள னர். எனவே, உடனடியாக அங்கன்வாடி கட்டிடத்தை திறக்க வேண்டும்.  மேலும் சிறு மின்விசை நீர்த்தேக்கத் தொட்டி பழுதடைந்து பல வருடங்கள் ஆகியும், இதுவரை மராமத்து செய்யப்படா மல் உள்ளது. இதனால் பொதுமக்கள் குடிநீருக்கு சிரமப்படுகின்றனர். மேலும், 12 வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட சாலை சேதடைந்துள்ளது. அதனை உடனடியாக புதுப்பிக்க வேண்டும்.  இப்பகுதியில், உள்ள 20 பேருக்கு மனைப்பட்டா வழங்கப்பட்ட நிலையில், 50 குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு இதுவரை வழங்கப்படாமல் உள்ளது. இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனு  அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படா மல் உள்ளது.   எனவே, பொதுமக்களுக்கு மனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.