திருச்சிராப்பள்ளி, நவ.17- திருச்சிராப்பள்ளி மாவட் டம் முசிறி அருகே சிறுமியை கூட்டுப் பலாத்காரம் செய்த வழக்கில் மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். முசிறியை அடுத்த அய் யம்பாளையம் அந்தரப் பட்டி பகுதியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவரது மகன் ரங்கநாதன்( 33). கடந்த 2021-ஆம் ஆண்டு இவருக் கும், 16 வயது சிறுமி ஒரு வருக்கும் பழக்கம் ஏற் பட்டுள்ளது. இதையடுத்து ரங்கநாதன், தனது செல் போன் மற்றும் சிறுமிக்கு தேவையான சிறு சிறு பொருட் களை கொடுத்து, அந்தச் சிறுமியுடன் பழகியுள்ளார். இந்நிலையில் சம்பவத் தன்று கோட்டூர் ஆற்றுப் படுகை அருகில் உள்ள தைலமரக்காட்டில் ஆள் நட மாட்டம் இல்லாத பகுதிக்கு சிறுமியை அழைத்துச் சென்ற ரங்கராதன். அங்கு சிறுமிக்கு மது கொடுத்துள்ள னர். பின்னர் சிறுமியை, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதை அவ ரது நண்பர்களான சிறு காம்பூரை சேர்ந்த மணிகண் டன்(23), ராஜமாணிக்கம் என்ற கணேசன்(28) மற்றும் அவரது நண்பர்கள் இரண்டு பேர் வீடியோ எடுத்துள்ள னர். பின்னர் அவர்கள் ஒரு வர் பின் ஒருவராக சிறுமி யை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இது பற்றி வெளியில் கூறினால், வீடியோவை இணையதளத்தில் வெளி யிட்டு விடுவதாக மிரட்டியுள் ளனர். இது குறித்து முசிறி அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ரங்கநாதன், மணிகண்டன், கணேசன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். மேலும் இரண்டு பேரைத் தேடி வந்த னர். இந்த நிலையில் இவ் வழக்கில் தொடர்புடைய தினேஷ் (23), சரண் (20) ஆகியோரை கைது செய்த னர்.