districts

img

சிவப்பு நிறத்தில் வரும் குடிநீர்: எழிலூர் மக்கள் போராட்டம்

திருத்துறைப்பூண்டி, ஆக.9 - எழிலூர் ஊராட்சியில் குழாயில் குடிதண்ணீர் சிவப் பாக வருவதால் பொது மக்கள் போராட்டத்தில் ஈடு பட்டனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ளது எழிலூர் ஊராட்சி. இந்த ஊராட்சியில் எழிலூர் காலனி தெரு உள்ளது. மேலும் இந்த பகுதி மக்க ளுக்கு குடிதண்ணீர் மேலத் தெருவில் நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குழாய் கள் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது. காலனி  தெருவில் சுமார் நூற்றுக்க ணக்கான குடும்பங்கள் வசிக்கின்றன.  அருகில் உள்ள எழிலூர் சமத்துவபுரத்திற்கும் இந்த தண்ணீர் செல்கிறது. ஆனால் இந்த குழாய்களில் வரும் தண்ணீர் சிவப்பு நிறத் தில் இருப்பதால், தண்ணீரை  பயன்படுத்த முடியவில்லை. இதனால் பொதுமக்கள் மிக வும் சிரமத்திற்கு ஆளா கின்றனர். கால்நடைகளுக்கு கூட தண்ணீர் இல்லாமல் சிரமப்படும் சூழல் ஏற்பட்டு உள்ளது. அருகில் உள்ள அடி பம்பு மூலம் தண்ணீர் எடுத்துக் கொள்கிறார்கள்.  தண்ணீர் சிவப்பு நிறத் தில் வருவது குறித்து அதி காரிகளுக்கு பலமுறை தக வல் தெரிவித்தும் நடவ டிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் வருத்தம் தெரிவித்து, வெள்ளியன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், “இந்த தண்ணீரை பயன் படுத்துவதால் உடலுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படு கிறது. சம்பந்தப்பட்ட துறை  அதிகாரிகளுக்கு தகவல்  தெரிவித்தும் எந்தவித நடவ டிக்கையும் எடுக்கவில்லை. எனவே போராட்டத்தில் ஈடு படுவதாகவும், தொ டர்ந்து இதே நிலை நீடித்தால்  அடுத்தக் கட்ட போராட் டத்திற்கு செல்ல இருப்பதாக வும்” தெரிவித்தனர்.  ஆகை யால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனே நடவ டிக்கை மேற்கொள்ள வேண் டும் என அந்தப் பகுதி பொது மக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.