districts

கட்சி  ரசிது வழங்கும் பேரவை ஒன்றிய செயலாளர் ஜான் கென்னடி தலைமையில் நடைபெற்றது

நீடாமங்கலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய, மாநிலக் குழு முடிவுகள் விளக்க மற்றும் கட்சி  ரசிது வழங்கும் பேரவை ஒன்றிய செயலாளர் ஜான் கென்னடி தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் கலந்து கொண்டு மத்திய, மாநிலக் குழு முடிவுகளை விளக்கியும் கட்சி உறுப்பினர்களுக்கு ரசீது வழங்கியும் சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.கந்தசாமி, மூத்த தலைவர்கள் பி.ரத்தினம், எஸ்.ராஜமாணிக்கம், மாவட்டக் குழு உறுப்பினர் சுமதி உட்பட பலர் பங்கேற்றனர்.