districts

img

பூர்வீகச் சொத்தில் பெயரை சேர்க்கக் கோரி அவசர ஊர்தியில் வந்து மூதாட்டி மனு

அரியலூர், ஜன.28 - பூர்வீக சொத்தில் தனது பெயரையும், தனது மகள் பெயரையும் சேர்க்கக் கோரி,  84 வயது மூதாட்டி அவசர கால ஊர்தி  ஸ்டெச்சரில் வந்து, அரியலூர் மாவட்ட ஆட்சி யர் பொ.ரத்தினசாமியிடம் மனு அளித்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகக் கூட்டரங்கில், திங்கள்கிழமை குறை கேட்பு கூட்டம் நடைபெற்று கொண்டிருந் தது. அப்போது, அரியலூரை அடுத்த மேட்டுப் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி நல்லம்மாள் (84), அவசர கால ஊர்தி ஸ்டெச்சரில் வந்து மனு அளித்தார். அந்த மனுவில், “எனது கணவர் துரை சாமி இறந்து விட்ட நிலையில், தற்போது நான்  நலிவுற்று எனது மகள் தனபாக்கியம் வீட்டில் வசித்து வருகிறேன். எனது மகன்களான தன வேலும், ராமலிங்கமும், பூர்வீகச் சொத்தி லிருந்து தனது பெயரையும், தனது மகளை  பெயரையும் வாரிசாக காட்டாமல், அவர்க ளது பெயரிலேயே அனைத்து சொத்துகளை யும் பட்டாவாக மாற்றி உள்ளார்கள். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுப் பட்டாவில் எனது பெயரை யும், எனது மகள் பெயரையும் சேர்க்க வேண்டும்” என தெரிவித்துள்ளார். மனுவைக் பெற்று கொண்ட ஆட்சியர்  ரத்தினசாமி, உரிய விசாரணை மேற்கொண்டு  நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலு வலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் கூட்டுப் பட்டாவில் பெயர் சேர்ப்பதற்காக மூதாட்டியை இப்படி அழைத்து வராதீர்கள் என அறிவுரை கூறி அனுப்பினார். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.