கரூர், மே 20-
கரூர் மாவட்டம் கடவூர் வட்டம் மற்றும் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மத்தகிரி ஊராட்சியில் உள்ள ‘சக்கிலியப்பட்டி’ என்ற கிராமத்தின் பெயர் ‘குறிஞ்சி நகர்’ என பெயர் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிக்கை கரூர் மாவட்ட அரசிதழில் (அரசிதழ் எண்.16, நாள்.24.04.2023) சிறப்பு வெளியீடாக வெளியிடப் பட்டுள்ளது என கரூர் மாவட்ட ஆட்சியர் மரு. த.பிரபுசங்கர் தெரி வித்துள்ளார்.