districts

img

மகன்களிடமிருந்து சொத்தை பிரித்துத் தருக! ஆம்புலன்ஸில் வந்து தாய் மனு அளிப்பு

அரியலூர்,  செப்.23 - அரியலூர் மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தி னுள், உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலை யில் ஆம்புலன்ஸில் வந்த தாய் ஒருவர், தனது மகன்களிடமிருந்து சொத்தை பிரித்துத் தரக் கோரி திங்கள்கிழமை மனு அளித்தார். இலுப்பையூர் கிரா மத்தைச் சேர்ந்த து. நல்லம்மாள் (85) அளித்த அந்த மனுவில், “எனது கணவர் இறந்த  பிறகு, எனது மகன்கள் என்னை கவனிக்க வில்லை. கீழே விழுந்து கால்கள் முறிந்து படுத்த படுக்கையில் இருக்கும் என்னை, எனது மகள் தனபாக்கியம்தான் 20 ஆண்டு களாக கவனித்து வருகிறார்.  மேட்டுப்பாளையம், காவேரிப்பாளை யம் உள்ளிட்ட கிராமங்களில் எங்களுக்கு பொதுவான 10 ஏக்கர் நிலத்தை எனது மகன்கள் இருவரும் அனுபவித்து வந்தனர். இந்நிலை யில், தற்போது எனக்கே தெரியாமல், அவர் களுக்குள்ளே பிரித்துள்ளனர். இதுகுறித்து காவல் துறையினரிடம் தெரிவித்தும் நடவ டிக்கை இல்லை. எனவே ஆட்சியர், எனது மகன்கள் அபகரித்துள்ள சொத்தைப் பிரித்துத் தர நடவடிக்கை எடுக்குமாறு” குறிப்பிட்டுள்ளார்.