districts

img

தா.பழூர் ஊராட்சி ஒன்றியத்தில் பயணியர் நிழற்குடை, அங்கன்வாடி மையத்தை எம்எல்ஏ திறந்து வைத்தார்

அரியலூர், ஜன.3 -  அரியலூர் மாவட்டம்,  தா.பழூரில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2024 2025- இன் கீழ்,ரூ 6.50 இலட்சம் மதிப்பீட்டில்,தா.பழூர் காவல் நிலையம் எதிரில் பயணியர் நிழற்குடை, இடங் கண்ணி ஊராட்சி அண்ணங்காரன்பேட்டையில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்  கீழ்,ரூ 14.31இலட்சம் மதிப்பீட்டில்,புதிதாக கட்டப் பட்டுள்ள அங்கன்வாடி மையம் கட்டிடம் திறப்புவிழா, கோடாலிகருப்பூரில்,சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் ரூ. 7 இலட்சம் மதிப்பீட்டில், கோடாலிகருப்பூர் காலனியில்,சிறு பாலத்துடன் கூடிய சிமெண்ட் சாலை உள்ளிட்ட முடிவுற்ற திட்டப் பணிகளை  ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் துவக்கி வைத்தார்.  இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குருநாதன் (வட்டார ஊராட்சி), பொய்யாமொழி (கிராம ஊராட்சி), மண்டல துணை  வட்டார வளர்ச்சி அலு வலர் ஜெயா,ஊராட்சி மன்ற தலைவர்கள் தி.ராசா ராம் (நாயகனைப்பிரியாள் ஊராட்சி), வி.கதிர்வேல் (தா.பழூர்),சுதா இளங்கோவன் (கோடாலிகருப்பூர் ஊராட்சி),ஷீலா இளங்கோவன் (இடங்கண்ணி) மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். இதேபோல் நாயகனைப்பிரியாள் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில்,மாவட்ட மருத்துவரணி  தலைவர் டாக்டர் மா.சங்கர்  ஏற்பாட்டில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, எழுது பொருட்களை, ஜெயங்கொண்டம் எம்எல்ஏ .க.சொ.க.கண்ணன்  வழங்கினார்.