districts

திருச்சி முக்கிய செய்திகள்

இளைஞரைக் கொன்ற   4 பேருக்கு ஆயுள் தண்டனை

தஞ்சாவூர், செப்.26 -  கோயில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேருக்கு தஞ்சாவூர் நீதிமன்றம் புதன்கிழமை ஆயுள் சிறை தண்டனை விதித்தது. தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டத்துக்கு உள்பட்ட மெலட்டூர் அருகே கோணியக்குறிச்சியைச் சேர்ந்த வர் சிங்கராயர் மகன் வினோதகன் (23). அப்பகுதியில் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற கோயில் திருவிழாவில் ஒலி பெருக்கி மூலம் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன. அப்போது வினோதகன் கோரிய பாடலை போடுவதற்கு அதே பகுதியைச் சேர்ந்த எல். ரமேஷ் (46) மறுத்துவிட்டார். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.  இதில், வினோதகனை ரமேஷ், அதே பகுதியைச் சேர்ந்த எஸ். சந்திரசேகரன், டி.சேகர் (55), ஜெ.ராஜா (46) ஆகியோர் தாக்கி, டியூப்லைட்டை உடைத்து அவரது கழுத்தில் குத்தினர். இதனால் பலத்த காயமடைந்த வினோதகன் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு உயிரிழந்தார். இது குறித்து மெலட்டூர் காவல்துறையினர்  வழக்குப் பதிந்து ரமேஷ், சந்திரசேகரன், சேகர், ராஜா ஆகியோரை கைது செய்தனர். இது தொடர்பாத தஞ்சாவூர் மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் அரசு சார்பில் அரசு வழக்குரைஞர் இளஞ்செழியன் ஆஜரானார்.  இந்த வழக்கை நீதிபதி ஆர். சத்ய தாரா விசாரித்து ரமேஷ், சந்திரசேகரன், சேகர், ராஜா ஆகியோருக்கு ஆயுள் சிறை தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து புதன்கிழமை தீர்ப்பளித்தார்.

கவிநாடு கண்மாயில் பனை விதைகள் நடும் பணி அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

புதுக்கோட்டை, செப்.26-  புதுக்கோட்டை கவிநாடு கண்மாய் பகுதியில், பனை விதைகள் நடும் பணியினை, சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.  பின்னர் அமைச்சர் எஸ்.ரகுபதி கூறுகையில், பனையின் ஓலைகள் கூரைகள் கட்டுவதற்கும், அதன் மட்டை பாதுகாப்பு படல் அமைக்கவும், அதன் நாறு கட்டுவதற்கும், அதன் ஓலைகள் கலைபொ ருட்கள், பாய், பெட்டி போன்றவற்றை செய்யவும் பயன்படுகிறது. எண்ணி லடங்கா பயன்களைத் தரும் இந்த பனை மரத்தின் விதைகளை விதைத்து உரிய முறையில் பாதுகாத்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என்றார்.  அமைச்சர் மெய்யநாதன் பேசுகையில்,  பராமரிப்பில்லாமலே காலத்துக்கும் பயன் தரும் மரமான பனை மரம் தமிழர்களின் வாழ்விய லோடு நெருங்கிய உறவுடையது. நம் மொழியின் அரிய இலக்கியங்களும் சுவடிகள் மூலமே பல நூற்றாண்டுகள் கடத்தப்பட்டன. எண்ணிலடங்கா பயன்களை தரும் பனை மரத்தினை அனைவரும் வளர்த்து பேணிகாத்திட வேண்டும் என்றார். நிகழ்வுக்கு மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலைமை வகித்தார். புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, மாநகராட்சி துணை மேயர் எம்.லியாகத் அலி, மாவட்ட வன அலுவலர் எஸ்.கணேச லிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பேராவூரணி பகுதியில் மின் கணக்கீட்டில் குளறுபடி : கணக்கீட்டாளர் பணியிடை நீக்கம்

தஞ்சாவூர், செப்.26 -  தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி நகர்ப்பகுதி யில்  உள்ள வீடுகள் மற்றும் கடைகளில்  கடந்த சில மாதங்களாக முறையாக மின்கணக்கீடு (ரீடிங்) எடுக் காத காரணத்தால் மின் கணக்கீட்டாளர் தற்காலிக பணியிடை நீக்கம் செய் யப்பட்டார்.  பேராவூரணி மின்வாரிய அலுவலகத்தில் கடந்த சில  மாதங்களாக மின் கணக்கீடு செய்பவராக  ரமேஷ் என்ப வர் பணியில் இருந்து வந்தார். இவர் வீடுகள், கடை களுக்கு கணக்கு எடுக்க  செல்லும்போது  மதுபோ தையில் செல்வதாகவும், சில வீடுகளுக்கு கணக்கெ டுத்து விட்டு, பல வீடுகளுக்கு கணக்கெடுக்காமல்  சில ருக்கு குறைவாகவும், சில ருக்கு அதிகமாகவும் ரீடிங் குறித்து விட்டுச் சென்றதா கவும் புகார் கூறப்பட்டு வந்தது. மேலும், கணக்கெடுப்பு க்கு செல்லாமலேயே, வீடுகள் பூட்டப்பட்டிருந்ததா கக்கூறி, குறைந்த அளவு கட்டணம் (மினிமம் சார்ஜ்) கட்டுமாறு, பொது மக்க ளுக்கு மின்வாரிய குறுந்தக வல் வந்தது. குறைந்த கட்டணம் என பொதுமக்கள் மின் கட்டணம் செலுத்தி வந்த நிலையில், தற்போது ரீடிங் அதிகரித்த நிலையில் ஒவ்வொருவரும் வழக் கத்தைவிட அதிக மின்கட்ட ணம் கட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து புகார் கூறி  வந்த நிலை யில் மின்வாரிய உயர் அலு வலர்கள் ஆய்வு செய்தனர்.இதில் சம்பந்தப்பட்ட மின் கணக்கீட்டாளர் ரமேஷ் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளார்.

நாளை திருச்சியில்  வேலைவாய்ப்பு முகாம் 

திருச்சிராப்பள்ளி, செப்,26- திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு- தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் (28 ஆம் தேதி)  சனிக்கிழமை அன்று திருச்சிராப்பள்ளி ஐமால் முகமது கல்லூரியில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3மணி வரை நடைபெறவுள்ளது.   இம்முகாமில் தொழில்துறை, சேவைத்துறை, விற்பனைத்துறை போன்ற பல்வேறு தனியார் துறைகளைச் சார்ந்த 150-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளன. மேலும் இந்த மாவட்டத்திலுள்ள திறன் பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு இலவச திறன் பயிற்சிக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளன.   இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 10 ஆம் வகுப்பு,  பனிரெண்டாம் வகுப்பு, ஐ.டி.ஐஇ டிப்ளமோ, செவிலியர், இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகள் மற்றும் பொறியியல் பட்டப்படிப்புகள் போன்ற கல்வித்தகுதிகளையுடைய 18 வயது முதல் 35 வயதிற்குட்பட்ட வேலைநாடுநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சுய விவரக்குறிப்பு  அனைத்து கல்விச்சான்றுகளின் நகல்கள்,  ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும் தனியார்துறையில் வேலைவாய்ப்பு பெற விரும்பும் வேலைநாடுநர்கள்இ தமிழ்நாடு அரசின் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்தும் பயன்பெறலாம். இது தொடர்பான மேலும் தகவல்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ   அல்லது   0431-2413510,  94990-55901,  94990-55902 என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது. மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

சாலை விபத்தில் மகன் பலி: பெற்றோருக்கு ரூ. 25.10 லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவு

தஞ்சாவூர், செப்.26 -  சாலை விபத்தில் உயிரிழந்த மகனின் பெற்றோருக்கு இழப்பீடு தர மறுக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு ரூ. 25.10 லட்சம் வழங்குமாறு காப்பீடு நிறுவ னத்துக்கு தஞ்சாவூர் நுகர்வோர் குறை  தீர் ஆணையம் புதன்கிழமை உத்தர விட்டது. தஞ்சாவூர் அருகே திருக்கானூர்பட்டி யைச் சேர்ந்தவர் எம். மணி. இவரது இரண்டாவது மகன் முருகேசன் .தஞ்சா வூர் - புதுக்கோட்டை சாலையில் காடவ ராயன்பட்டி புது நகர் பிரிவு சாலையில் 2021, டிசம்பர் 25 ஆம் தேதி இரு சக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்தார்.  தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முருகேசன் அங்கு 2021, டிசம்பர் 29 ஆம் தேதி உயிரிழந்தார். பின்னர், முருகேசன் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் காப்பீடு நிறுவனத்தில் 2021, ஏப்ரல் 20 முதல் 2022, ஏப்ரல் 19 ஆம் தேதி வரையிலான கால கட்டத்துக்கு ரூ. 1,000 பிரிமியம் செலுத்தி ரூ. 20 லட்சத்துக்கு காப்பீடு செய்திருப்பது பெற்றோருக்கு தெரிய வந்தது. இது தொடர்பாக இழப்பீடு கோரி காப்பீட்டு நிறுவனத்துக்கு முருகேசனின் பெற்றோர் மணி - முத்தம்மாள் விண் ணப்பம் செய்தனர். ஆனால், முருகேசன் மது அருந்தி வாகனத்தை அதிவேகமாக ஓட்டியதாக காவல் துறையின் இறுதி அறிக்கையில் இருப்பதாகக் கூறி இழப் பீடு வழங்க காப்பீட்டு நிறுவனத்தினர் மறுத்துவிட்டனர். இது தொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட நுகர்வோர் குறை தீர் ஆணையத்தில் மணி - முத்தம்மாள் புகார் மனு தாக்கல் செய்த னர். இதன் பேரில் ஆணையத் தலைவர் த.சேகர், உறுப்பினர்  கே.வேலுமணி விசாரித்து, மணி - முத்தம்மாளுக்கு காப்பீடு இழப்பீட்டுத் தொகை ரூ. 20 லட்சத்தை முருகேசன் உயிரிழந்த தேதியிலிருந்து திரும்ப வழங்கும் தேதி வரை 9 சதவீத வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என்றும், மன உளைச்சலுக்காக ரூ. 5 லட்ச மும், வழக்குச் செலவுத் தொகையாக ரூ. 10 ஆயிரமும் வழங்க வேண்டும் எனவும் புதன் கிழமை உத்தரவிட்டு தீர்ப்பளித்தனர்.

கொரடாச்சேரி, வலங்கைமான் ஒன்றியங்களில் சிபிஎம் கிளை மாநாடுகள்

திருவாரூர்,செப்.26- திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி மற்றும் வலங்கைமான் ஒன்றியங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை மாநாடுகள் நடைபெற்றன.    கொரடாச்சேரி கிளை செயலாளராக யு.ரெங்கசாமி, கிளரியம் கிளை செயலாளராக ஏ.கலியமூர்த்தி, முகந்தனூர் கிளை செயலாளராக எஸ்.வீரமணி, குழிக்கரை ஏ.கிளை செயலாளராக எம்.தங்கராஜ், குளிக்கரை பி.கிளை செயலாளராக கே.குமர வேல், அம்மையப்பன் ஏ.கிளை செயலாளராக ஜீ.கபீர்தாஸ், அம்மையப்பன் பி.கிளை செயலாளராக எம்.எஸ்.பாலன், காட்டூர் கிளை செயலாளராக கே. நாகராஜன், எட்டியலூர் கிளை செயலாளராக சி.தங்கராஜ்,செம்மங்குடி கிளை செயலா ளராக எஸ்.சண்முகம்,அடவங்குடி கிளை செயலாளராக எஸ்..சோமசுந்தரம், திருக்கண்ணமங்கை கிளை செய லாளராக கே.கணேசன்,மணக்கால் கிளை செயலாளராக ஆர்.ரமேஷ்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். வலங்கைமான் வேடம்பூர் கிளை செயலாளராக ஏ.சுப்பிரமணியன் கேத்தனூர் கிளை செயலாளராக எம்.கல்யணசுந்த ரம், கொட்டையூர் கிளை செயலாளராக   டி.கலியபெரு மாள், அரையூர் கிளை செயலாளராக ஆர்.கலியபெரு மாள், வலையம்மாபுரம் கிளை செயலாளராக என்.சாந்தா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி. கொரடாச்சேரி ஒன்றிய செயலாளர் டி.ஜெயபால்,வலங்கைமான் ஒன்றிய செயலாளர் என்.இராதா ஆகியோர் பங்கேற்றனர்.

மாணவர்கள்  விழிப்புணர்வு பேரணி

அறந்தாங்கி, செப்.26-  புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு பாலிடெக் னிக் செஞ்சுருள் சங்கம் மாணவ, மாணவிகள். (எச். ஜ.வி)  எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் தொற்று குறித்து விழிப்பு ணர்வு பேரணியை நடத்தினர் . கல்லூரி முதல்வர் ச.குமார் பேரணியை துவக்கி வைத்தார். ஐசிடிசி ஆலோசகர் விஜி மற்றும் சுகவாழ்வு மைய ஆலோசகர் ரமாபிரியா, ஆகி யோர் முன்னிலை வகித்தனர். 

நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் 

அறந்தாங்கி,செப்.26 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சி சார்பில் தூய்மை இந்தியா திட்டத்தின் தூய்மையே சேவை விழிப்புணர்வு முகாம் நகர் மன்ற தலைவர் இரா.ஆனந்த் தலைமையில் துணைத் தலைவர் முத்து முன்னிலையில் நடைபெற்றது. கேம்பிரிட்ஜ் கேட்டரிங் கல்லூரி மாணவர்கள் கல்லூரி முதல் பேருந்து நிலையம் வரை நெகிழி ஒழிப்பு விழிப்பு ணர்வு முழக்கமிட்டு பேரணியாக சென்று பொதுமக்க ளிடம் பிரச்சாரம் மேற்கொண்டனர். அறந்தாங்கி நகர் மன்ற தலைவர் இரா.ஆனந்த் துணைத் தலைவர் முத்து, கவுன்சிலர்கள் காசிநாதன் துளசிராமன் சிவபிரகாசம் அசாருதீன் ஆகியோர் நெகிழி பைகளை கொண்டு சென்ற பொதுமக்களிடம் அவைகளைப் பெற்றுக் கொண்டு  மஞ்சப்பைகளை வழங்கினர். பிளாஸ்டிக் பயன்பாட்டின் ஆபத்துகள் குறித்து பிரச்சாரம் செய்தனர்.