districts

img

சிறப்பாக பணியாற்றிய நூலகர்களுக்கு அமைச்சர் பாராட்டு

திருச்சிராப்பள்ளி, ஆக.18 - திருச்சிராப்பள்ளி மாவட்ட நூலக ஆணைக்குழு மற்றும் மாவட்ட மைய நூலக  வாசகர் வட்டம் இணைந்து மாவட்ட மைய  நூலகத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார்  தலைமையில் நூலகர் தின விழாவை நடத்தின. இதில், சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை  பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கி பாராட்டி னார். விழாவில் 2023-24 ஆம் ஆண்டில் அதிக உறுப்பினர்கள், அதிக புரவலர்கள், அதிக நன்கொடைகள் பெற்றவர்கள், விடுப்பு எடுக்காமல் பணிபுரிந்த நூலகர்கள், சிறந்த  முறையில் நூலக விழிப்புணர்வு நிகழ்ச்சி களை நடத்தியவர்கள், நூலக நண்பர்கள் அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ்களை அமைச்சர் வழங்கினார்.