districts

img

7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்க தேர்வான மாணவர்களுக்கு அமைச்சர் வாழ்த்து

அறந்தாங்கி, செப்.29 - ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி யில் படித்து மருத்துவம் படிக்க தேர்வான மாணவர் களை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் அழைத்து வாழ்த்தினார்.  ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளில் 2024 ஆம் ஆண்டு நீட் தேர்வு  எழுதி தேர்ச்சி பெற்று 7.5  சதவீத அரசு உள்ஒதுக்கீட் டில் கே.திவ்யதர்ஷினி, கே. ஹரிநந்தா, சிவகங்கை மருத்துவ கல்லூரியிலும், எஸ்.சிவராஜா தர்மபுரி மருத்துவக் கல்லூரியிலும் மருத்துவம் பயில தேர்வு பெற்றுள்ளனர். ஆவுடையார்கோவில் பள்ளி வரலாற்றில் முதல் முறையாக மூன்று மாண வர்கள் மருத்துவம் பயில தேர்வு பெற்றதனை அறிந்த  அமைச்சர் சிவ.வீ.மெய்ய நாதன் மாணவர்களை நேரில் அழைத்து பாராட்டி னார். மேலும் மருத்து வக்கல்வி பயில தேவைப் படும் அனைத்து உதவி களையும் செய்து தருவ தாக தெரிவித்தார்.