திருச்சிராப்பள்ளி, ஜூலை 24 - இந்திய மாணவர் சங்க மாநிலத் தலை வர் சம்சீர் அகமது தலைமையில், திருச்சி மாவட்டத் தலைவர் சூர்யா, மாவட்டச் செய லாளர் ஜி.கே.மோகன், சட்டக் கல்லூரி கிளைத் தலைவர் கவின் ஆதித்யா, கிளைச் செயலாளர் அபிராமி, மாவட்டக் குழு உறுப்பி னர் அழகுராஜா ஆகியோர் சட்டத்துறை அமைச்சர் ரகுபதியிடம் மனு அளித்தனர். அம்மனுவில், “திருச்சி மாவட்டம் காஜா மலை பகுதியில் அரசு சட்டக் கல்லூரி இயங்கி வருகிறது. இச்சட்டக் கல்லூரியில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்க ளிலிருந்து மாணவர்கள் சட்டப் படிப்பை பயின்று வருகின்றனர். இச்சட்ட கல்லூரியில் படிக்கக் கூடிய மாணவர்கள் சட்டத்துறை யில் மட்டுமல்லாமல், விளையாட்டு துறையி லும் மிகவும் ஆர்வமும், திறமையும் கொண்ட வராக விளங்குகின்றனர். பல்வேறு மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி களில் கலந்துகொண்டு பரிசுகளை பெற்று வரு கின்றனர். திருச்சி சட்டக் கல்லூரி மாணவர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் விதமாக, கடந்த 2023 நிதியாண்டில் திருச்சி சட்டக் கல்லூரியில் உள்விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டு திருச்சி அரசு சட்டக் கல்லூரிக்கு உள் விளையாட்டு அரங்கம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால் கல்லூரியில் உள் விளையாட்டு அரங்கம் கட்டுவதற்கு ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்ததாரர் பணியை முழுவதும் செய்து முடிக்காமல் பாதியிலேயே கிடப்பில் போட்டுவிட்டனர். இதனால் மாணவர்கள் தாங்கள் விளையாட்டு பயிற்சிகளை மேற்கொள்வ தற்கு பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்ற னர். எனவே சட்டத்துறை அமைச்சர் இதில் உடனடியாக தலையிட்டு திருச்சி அரசு சட்டக் கல்லூரியின் உள் விளையாட்டு அரங்க பணிகளை மீண்டும் மேற்கொள்ள வேண்டும் என இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக் குழு சார்பாக வலியுறுத்துகிறோம்” என கூறியிருந்தனர்.