districts

img

கனமழையால் ஓட்டு வீடு முற்றிலும் சேதம்

அறந்தாங்கி, நவ.4 - புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடை யார்கோவில் ஒன்றியம் கதிராமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட சாத்தியடி கிராமத்தில் கருப்பன் என்பவருடைய ஓட்டு வீடு, திடீ ரென்று பெய்த கனமழையால் நொறுங்கி விழுந்தது. இதில் வீடு முழுவதும் சேதமானது. அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்த 5 பேரும் உயிர் தப்பி னர்.  நிலமற்ற ஏழை கூலித் தொழிலாளியான கருப்பன் குடும்பத்தினர், தற்போது வாழ வழி இல்லாமல் நிற்கதி யாய் உள்ளனர். எனவே, அவரது குடும்பம் வாழ மாவட்ட நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டுமென சாத்தியடி கிராம மக்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.