பெரம்பலூர், ஆக.30 - சாலைப் பணியாளர்களின் நலன் சார்ந்த கோரிக்கை மனுவினை, தமிழ் நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்டம் சார்பில் 9.8.2024 அன்று நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறி யாளரை சந்தித்து மாவட்ட நிர்வாகி கள் வழங்கினர். அப்போது மனுவை வாங்க மறுத்த பெரம்பலூர் நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளரை கண்டித்து 27.8.2024 காலை 11 மணிக்கு தொடர் கண்டன முழக்க போராட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் பி.ராஜ்குமார் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் டி.பழ னிச்சாமி உள்ளிட்டோர் முன்னிலை வைத்தனர். மாநில துணைத் தலைவர் எஸ்.மகேந்திரன் துவக்கி வைத்துப் பேசி னார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் சி.சுப்பிரமணி யன் பேசினார். தமிழ்நாடு அரசு தொழிற் பயிற்சி அலுவலர் சங்கத்தின் மண்டல செயலாளர் ஏ.தெய்வராசா வாழ்த்துரை வழங்கினார். மாநிலத் தலைவர் மா. பாலசுப்பிரமணியன் நிறைவுரை யாற்றினார். மாவட்டப் பொருளாளர் பி. சுப்பிரமணியன் நன்றி கூறினர். தொடர் போராட்டத்தின் வாயிலாக, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறி யாளர், மாவட்ட-மாநில நிர்வாகிகளை அழைத்துப் பேசி, கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்டார். கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்தார்.