districts

img

‘நடப்போம் நலம் பெறுவோம்’ நடைபயிற்சியில் ஆட்சியரும் பங்கேற்றார்

சிவகங்கை, செப்.1 சிவகங்கை மாவட்டம், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில், “நடப் போம்  நலம் பெறுவோம்” (Health Walk) திட்டத்தின் கீழ்  ஞாயிறன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக நுழைவுவாயில் பூங்கா அருகில்,   மாவட்ட ஆட்சித்தலைவர்  ஆஷா  அஜித்,   நடை பயிற்சியினை துவக்கி வைத்து, பொதுமக்களுடன் நடை பயணம் மேற்கொண்டு  சிறப்பித்து தெரிவிக்கையில், தமிழ்நாடு  முதல்வர்,  உடல்நலத்தினை சரிவர பேணிகாத்திடும் பொருட்டு, மருத்து வம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் எண்ணற்ற திட்டங்களை தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். இத்திட்டத்தின் கீழ் முன்னதாக, காரைக்குடி பகுதியில் இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. அத னைத்தொடர்ந்து, சிவகங்கையிலும் இன்றைய தினம்“நடப்போம்  நலம் பெறுவோம்” (Health Walk) திட்டத்தின் கீழ் நடைபயிற்சி நிகழ்ச்சி யானது சிறப்பாக நடைபெறு கிறது. அதில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக நுழைவு வாயில் பூங்கா அருகில் நடைப்பயிற்சி யானது தொடங்கப்பட்டு, மொத்தம்   8 கி.மீ தூரம் வரை நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பொருட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், மாவட்ட நீதிமன்றம், ஆக்ஸ்போர்ட் பள்ளி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்கு நர் அலுவலகம், வட்டார போக்கு வரத்து அலுவலகம், பிஎஸ்என்எல்   அலுவலகம், அறிவுசார் மையம்  வழியாக  மீண்டும் மாவட்ட ஆட்சி யர் அலுவலக வளாக நுழைவு வாயில் பூங்கா அருகில் வந்த டைந்து, அதேபோன்று, இரண்டாம் சுற்றும் மேற்கொள்ளும் பொருட்டு நடைப்பயிற்சி நிகழ்ச்சியானது நடைபெற்றது. உலக சுகாதார அமைப்பின்  தரவுகளின் 10 ஆயிரம் அடிகள் அதாவது 8 கீ.மி தினமும் நடப்ப தால், சர்க்கரை மற்றும்  ரத்த  அழுத்த  நோய்கள் 28 சதவீதமும், இதயநோய்  தாக்கம்  30 சத வீதமும் குறைகின்றது என்று அறியப்படுகிறது. மேலும்,  நடை பயிற்சியானது  நம்மை சுறு சுறுப்பாகவும், ஆரோக்கியமான எடையுடன்  இருக்கவும், நாள்பட்ட உடல் நல பிரச்சனைகள் மற்றும் மன அழுத்தத்தை குறைக்கவும் உதவு கிறது. நடப்பது குறைந்து, உடற் பயிற்சி இல்லாததால் தற்போது தொற்றா நோய்கள் அதிகரித்து வருகின்றன. எனவே நடப்பதை ஒரு பழக்கமாக மாற்ற வேண்டும் எனும் நோக்கில்  இத்திட்டமானது சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வாறு மேற்கொள்ளப்படும் நடைபயிற்சியின் இறுதியில், ஆரோக்கியமான வாழ்க்கை நல வாழ்வு குறித்த விழிப்புணர்வு ஏற் படுத்தப்படுத்திடவும், அதில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொது மக்களின் உடல் நலத்தினை பேணிக் காத்திடும் பொருட்டு, அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் இது போன்ற  திட்டங்களை பொதுமக்கள் கருத்தில் கொண்டு, அதில் தங்களு டைய பங்களிப்பின முழுமையாக அளித்து, அதனை முறையாக பின் பற்றி அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு ஒத்து ழைப்பு நல்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்                   ஆஷா அஜித்  தெரிவித்தார்.