கரூர், ஆக.27 -
காவிரி குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்த விவசாயத் தொழிலாளர் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினருக்கு குளித்தலை ஒன்றிய மக்கள் நன்றி தெரிவித்துள் ளனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றியம், நங்கவரம் பேரூராட்சிக் குட்பட்ட 1 ஆவது வார்டு கருங்காடு, 6 ஆவது வார்டு பாதிய காவல் காடு, சவாரிமேடு, காளியம்மன் கோவில் மேடு ஆகிய பகுதிகளில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.
இப்பகுதியில் தற்போதுவரை காவிரி குடிநீர் குடிப்பதற்கு இல்லாததால், பொதுமக்கள் போர் மூலம் வழங்கிய உப்பு நீரை குடித்து வந்தனர். இதனால் பல்வேறு உடல் உபாதை பிரச்சனைகளை பொதுமக்கள் சந்தித்து வருகின்ற னர்.
பேரூராட்சியில் ஒரு பகுதிக்கு மட்டும் காவிரி குடிநீர் தினமும் கிடைக்கும் வகையில் பேரூராட்சி நிர்வாகம் வழங்கி வருகிறது. பிற பகுதியைச் சேர்ந்த மக்கள், தொடர்ந்து பல ஆண்டுகளாக நல்ல குடிநீர் இல்லாமல், உப்பு நீரை குடித்து வருகின்றனர். இதுகுறித்து பலமுறை பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுத்தும் பேரூராட்சி நிர்வாகம் இந்த மூன்று கிராம மக்களை கண்டு கொள்ளாமல் இருந்தது.
இந்நிலையில், சுமார் 25 ஆண்டு களுக்கும் மேலாக மக்களுக்கு எந்த வித அடிப்படை வசதியும் செய்து கொடுக்காமல் வஞ்சித்து வந்த நங்கவரம் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், குடிப்பதற்கு காவிரி குடிநீர், சுடுகாடு வசதி மற்றும் சுடு காட்டிற்கு பாதை, சாக்கடை கால் வாய், தெருவிளக்கு, பொது கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர வேண்டும் எனக் கோரியும் அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்கம், தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் குளித்தலை ஒன்றிய குழு சார்பில் நங்கவரம் பேரூராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த அறிவிக்கப்பட்டது.
போராட்ட அறிவிப்பை தொ டர்ந்து பேரூராட்சி நிர்வாகம் சுமூக பேச்சுவார்த்தை நடத்தியது. அதில், தொடர்ந்து காவிரி குடிநீர் உடனடியாக லாரி மூலம் வழங்கப் படும். விரைவில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் காவிரி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக் கப்படும். சுடுகாடு மற்றும் பாதை, தெருவிளக்கு, பொது கழிப்பிடம், சாக்கடை கால்வாய் ஆகிய வசதி களை செய்து தர நடவடிக்கை எடுக் கப்படும் என்று எழுத்துப்பூர்வ மாக அலுவலர்கள், பேரூராட்சித் தலைவர் ஆகியோர் உறுதியளித் தனர். பேச்சுவார்த்தையில் உடன் பாடு ஏற்பட்டதையடுத்து, போராட் டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
காவிரி குடிநீர் வழங்கிய பேரூராட்சி
போராட்ட அறிவிப்பால் நடை பெற்ற பேச்சுவார்த்தையின் அடிப் படையில், கருங்காடு, பாதிய காவல்காடு, சவாரி மேடு, காளியம் மன் கோவில்மேடு ஆகிய பகுதி களில், தற்போது இரண்டு நாட்க ளுக்கு ஒருமுறை வாகனங்கள் மூலம் காவிரி குடிநீரை பேரூராட்சி நிர்வாகம் வழங்கி வருகிறது.
இதுகுறித்து விவசாயத் தொழி லாளர் சங்க மாவட்டச் செயலாளர் பி.ராஜூ கூறுகையில், “விதொச, விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் அறிவித்ததன் காரண மாக இப்பகுதி மக்களின் 25 ஆண்டு கால கோரிக்கை நிறைவேறி யுள்ளது. பேரூராட்சி நிர்வாகம் தற் போது காவிரி குடிநீரை வழங்கி யுள்ளது. இது போராட்டத்தின் முதல் வெற்றியாகும். மேலும், காவிரி குடிநீர் நிரந்தரமாக கிடைக்க, குழாய்கள் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பகுதி மக்களின் மற்ற கோரிக் கைகளையும் நிறைவேற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பேரூராட்சியின் இந்நட வடிக்கையை விவசாயிகள், விவ சாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்டக் குழு சார்பில் வரவேற் கிறோம்” என்றார்.
பொதுமக்கள் மகிழ்ச்சி
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், “நீண்ட காலமாக உப்பு நீரை குடித்ததால், உடல்ரீதி யாக பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வந்தோம். எங்களுக்கு காவிரி குடிநீர் கிடைக்குமா என்பதே கேள்விக்குறியாக இருந்தது. ஆனால் விவசாயத் தொழிலாளர், விவசாயிகள் சங்கத்தினர் எங்க ளது கனவை நிஜமாக்கி உள்ளனர். எங்களது கிராம மக்கள் காவிரி நீரை பிடிக்கும் போது பெரு மகிழ்ச்சியடைந்தோம். இச்சங்கத் தினருக்கு நாங்கள் நன்றி தெரி வித்துக் கொள்கிறோம்” என்றனர்.