திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், நன்னிலம், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளிலுள்ள நடைபெறும் வாய்க்கால்கள் தூர்வாரும் பணியினை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது, திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, வட்டாட்சியர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.