மயிலாடுதுறை, அக்.29 - மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் மாவட்ட ஆட்சிய ரின் தன்விருப்ப நிதியின் கீழ் ரூ.30 ஆயிரம் நிதியுதவி பெற்ற மயிலாடுதுறை கிட்டப்பா தெருவைச் சேர்ந்த பரமேஸ்வரி என்ற பெண் நடமாடும் உணவுப் பொ ருட்கள் விற்பனை (சுய தொழில்) தொடங்குவதை “நிறைந்தது மனம்” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி பார்வையிட்டு முதல் விற்ப னையை தொடங்கி வைத்தார். மயிலாடுதுறை கிட்டப்பா தெருவில் வசிக்கும் பரமேஸ்வரி குடும்ப சூழ்நிலை மற்றும் பொருளாதார வறுமை நிலையை கூறி, சுய தொழில் தொடங்க நிதியுதவி கோரி, மனு வழங்கினார். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் கோரிக்கை மனுவை பெற்று கொண்டு மனு தாரர் சுய தொழில் தொடங்க, கடந்த 23.9.2024 அன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் தன்விருப்ப நிதியின் கீழ் ரூ.30 ஆயிரத்திற்கான காசோ லையை வழங்கினார். தொடர்ந்து, நிதியுதவி பெற்ற பர மேஸ்வரி நடமாடும் உணவு பொருட்கள் விற்பனையை தொடங்க திட்டமிட்டு (உணவு பொருட்களான முறுக்கு, சிப்ஸ், மிளகாய் பொடி, ஊறுகாய், இட்லி பொடி உள்ளிட்ட பொருட்கள் விற்பனை) மாவட்ட ஆட்சி யரை சந்தித்து நன்றி கூறி, தான் தொடங்க இருக்கும் சுய தொழிலை தொடங்கி வைக்கும்படி கேட்டுக் கொண்டார். அதன்படி, மாவட்ட ஆட்சியர் நட மாடும் உணவுப் பொருட்கள் விற்பனை வாக னத்தை “நிறைந்தது மனம்” திட்டத்தின்கீழ் பார்வையிட்டு, முதல் விற்பனையை பெற்று கொண்டு, தொடங்கி வைத்தார்.