தஞ்சாவூர், ஜூலை 7- அமெரிக்காவில் உள்ள ஒரத்தநாடு கோயிலின் சோழர் கால சிலையை மீட்க தமிழக அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும் என ஓய்வுபெற்ற காவல் தலைவர் பொன்.மாணிக்க வேல் வலியுறுத்தினார். தஞ்சாவூர் பெரியகோயி லுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த அவர் செய்தியாளர் களிடம் தெரிவித்ததாவது: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் சோ ழர் காலத்தைச் சார்ந்த சுமார் இரண்டரை அடி உய ரமுடைய வீணாதரர் (சிவன்) என்ற தொன்மையான ஐம் பொன் சிலை 1997 ஆம் ஆண்டில் திருடு போனது. இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். தற்போது இச்சிலை அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்திலுள்ள அருங் காட்சியகத்தில் உள்ளது. இது, 1958 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட புகைப்படத் துடன் ஒப்பிட்டுப் பார்த்து உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இச்சிலை 2 அல்லது 3 மாதங்களில் வே றொரு தனி நபரிடம் விற்கப் படவுள்ளது. அதன் பிறகு இச்சிலை எங்கு இருக் கிறது என்பதைக் கண்டறி வது சிரமம். எனவே, இச்சிலையை மீட்டு தமிழகத்துக்குக் கொண்டு வர அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து ஏற்கெனவே உள்ள வழக்கில் மீண்டும் விசாரணை நடத்த வேண் டும். மேலும், அமெரிக்க நாட்டுக்கு தமிழக அரசின் உயர்நிலை அலுவலர்கள் கடிதம் எழுதி, சிலையை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இச்சிலையின் தற்போதைய மதிப்பு ரூ. 25 கோடிக்கு குறையாமல் இருக்கும். இவ்வாறு அவர் தெரி வித்தார்.