கரூர், செப்.9 - 2024-2025 ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி கள் கரூர் மாவட்டத்தில், செப்.10 முதல் 23 வரை நடைபெற உள்ளன. இப்போட்டிகள், கரூர் மாவட்டத் தில் இருந்து 12 வயது முதல் 19 வயது வரை உள்ள பள்ளி மாணவ, மாணவி களுக்கும், 17 வயது முதல் 25 வயது வரை கல்லூரி மாணவ, மாணவி களுக்கும், 15 வயது முதல் 35 வரை பொதுப் பிரிவினருக்கும், அனைத்து வயது மாற்றுத் திறனாளிகளுக்கும், தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெற உள்ளன. பள்ளி மாணவர்களுக்கு... பள்ளி மாணவ-மாணவியர் களுக்கு செப்.10 அன்று தடகளம் - கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கத் திலும், சிலம்பம் - மாவட்ட விளை யாட்டு அரங்கத்திலும், செப்.10, 11 அன்று இறகுப்பந்து - பீ.ஸ்கொயர் காந்தி கிராமத்திலும், கோ-கோ மாவட்ட விளையாட்டு அரங்கத்தி லும், கிரிக்கெட் செட்டிநாடு பொறியி யல் கல்லூரியிலும், வளைகோல் பந்து மாவட்ட விளையாட்டு அரங்கத்திலும் நடைபெறுகின்றன. செப். 11 அன்று கூடைப்பந்து - குமாரசாமி பொறியியல் கல்லூரியி லும், டேபிள்டென்னிஸ் - வீனஸ் மெட்ரிக் பள்ளியிலும், கையுந்து பந்து - எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியிலும், கைப்பந்து மாவட்ட விளையாட்டு அரங்கத்திலும் நடை பெறுகின்றன. கால்பந்து - மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் செப்.14 மற்றும் 15 தேதிகளிலும், செஸ் - சேரன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி யில் செப்.16 அன்றும் நடக்கின்றன. செப்.17 அன்று நீச்சல் - வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், கேரம் - பரணிபார்க் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியிலும், கபாடி சேரன் உடற்கல்வியியல் கல்லூரியிலும் நடைபெறுகின்றன. கல்லூரி மாணவர்களுக்கு... கல்லுரரி மாணவ-மாணவியர் களுக்கு, செப்.11 அன்று தடகள மற்றும் சிலம்பம் கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்திலும், செப். 12 அன்று இறகுப்பந்து - பீ.ஸ்கெ யர், காந்தி கிராமத்திலும், டேபிள் டென்னிஸ் வீனஸ் மெட்ரிக் பள்ளியி லும், கால்பந்து மற்றும் வளைகோல் பந்து கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்திலும், செப்.13 அன்று கிரிக்கெட் - செட்டிநாடு பொறியியல் கல்லூரியிலும் நடைபெறுகிறது. செப். 14, 15 அன்று கூடைப்பந்து மற்றும் கையுந்துபந்து குமாரசாமி பொறியியல் கல்லூரியிலும், செப்.17 அன்று செஸ் - சேரன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், செப்.18 அன்று நீச்சல் - வேலம்மாள் மெட்ரிக் பள்ளியிலும், செப்.17 அன்று கேரம் - சேரன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியி லும், செப்.19, அன்று கபாடி - சேரன் உடற்கல்வியியல் கல்லூரி, புன்னம் சத்திரத்திலும், செப்.19, 20-இல் கைப்பந்து கரூர் மாவட்ட விளை யாட்டரங்கத்திலும் நடக்கின்றன. பொதுப்பிரிவு ஆண்கள்/பெண்களுக்கு... செப்.11-இல் சிலம்பம் - மாவட்ட விளையாட்டரங்கத்திலும், செப்.11, 12-இல் கிரிக்கெட் செட்டிநாடு பொறி யியல் கல்லூரியிலும், செப்.13-இல் இறகுப்பந்து பீ.ஸ்கொயர் காந்தி கிராமத்திலும், செப்.18-இல் கபாடி - சேரன் உடற்கல்வியியல் கல்லூரியி லும், கையுந்துபந்து குமாரசாமி பொறியியல் கல்லூரியிலும், செப்.19 -இல் தடகளம் - மாவட்ட விளையாட்ட ரங்கத்திலும், கேரம் - பரணி பார்க் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், செப்.21-இல் கால்பந்து - மாவட்ட விளையாட்டு அரங்கத்திலும் நடை பெறுகின்றன. அரசு ஊழியர்களுக்கு... செப்.14-இல் இறகுப்பந்து பீ.ஸ்கொயர் காந்தி கிராமத்திலும், செப்.18-இல் செஸ் - சேரன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வெண்ணமலை யிலும், செப்.19-இல் தடகளம் மாவட்ட விளையாட்டரங்கத்திலும், கேரம் - பரணி பார்க் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியிலும், செப்.20-இல் கபாடி மற்றும் கையுந்துபந்து - மாவட்ட விளையாட்டரங்கத்திலும் நடைபெறுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு... செப்.12-இல் சக்கர நாற்காலி, மேசைப்பந்து வீனஸ் மெட்ரிக் பள்ளி யிலும், செப்.14-இல் இறகுப்பந்து - பீ.ஸ்கொயர் காந்தி கிராமத்திலும், செப்.23-இல் தடகளம், கபாடி கையுந்துபந்து மற்றும் எறிபந்து போட்டி மாவட்ட விளையாட்டு அரங்கத்திலும் நடைபெற உள்ளன. கரூர் மாவட்டத்தில் முதல் முறை யாக முதலமைச்சர் கோப்பைக்கான மண்டல அளவிலான ஜூடோ போட்டி கல்லூரி மாணவர்களுக்கு சேரன் உடற்கல்வியியல் கல்லூரியில் செப்.20 மற்றும் 21 ஆம் தேதியும், பள்ளி மாணவ-மாணவர்களுக்கு செப்.21 மற்றும் 22 ஆம் தேதியும் நடைபெற உள்ளது. விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் காலை 7 மணிக்கு துவங்கப்படும். இணையதளத்தில் பதிவு செய்தவர்கள் மட்டுமே போட்டி யில் கலந்து கொள்ளலாம். போட்டி நடைபெறும்போது விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்பவர்கள் ஆதார் அட்டை, ஆளறிச் சான்றி தழ், வங்கிக் கணக்கு புத்தகம், மாற்றுத் திறனாளிகளுக்கு துறையால் வழங்கப்பட்ட அடையாள அட்டை, அரசுத் துறையினருக்கு அரசால் வழங்கப்பட்ட அடையாள அட்டை, பொதுப் பிரிவினர் ஆதார் அட்டை, இருப்பிடச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் அனைத்தின் நகல் களையும் போட்டி துவங்குவதற்கு முன் வழங்கிட வேண்டும். மேலும் விவரங்களுக்கு தமிழ் நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கரூர் மாவட்ட விளை யாட்டு அலுவலரின் அலைபேசி. 7401703493 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கரூர் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் தெரிவித்து உள்ளார்.