districts

img

கோரிக்கைகளை வலியுறுத்தி மின் ஊழியர் மத்திய அமைப்பு ஆர்ப்பாட்டம்

திருவாரூர், ஜூலை 3- திருவாரூரில் மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) சார்பில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். தனியார் மயமாக்கும் நடவ டிக்கையை கைவிட வேண்டும். பணப்பயன் களை வழங்கிட ஆகும் காலதாமதத்தை தவிர்க்க வேண்டும். மின் விபத்தில் உயி ரிழக்கும் மின்வாரிய பணியாளர்களுக்கு சிறப்பு நிதி ரூ.10 லட்சம் அறிவித்ததற்கான அர சாணையை வெளியிட வேண்டும் உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, திட்டத் தலைவர் சகாயராஜ் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் முருகையன், மாவட்டத் தலைவர் என்.அனிபா, திட்டச் செய லாளர் ராஜேந்திரன், திட்ட துணைத் தலை வர் மோகனசுந்தரம், திட்ட துணைச் செயலா ளர் ஜெயச்சந்திரன், முரளிதரன், மாவட்டச் செயலாளர் ஜோதிபாசு, முகேஷ் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.

;